Wednesday 17 July 2019

பசும்பொன் தேவரை கொலை செய்ய முயற்சித்த இஸ்லாமியர்கள்



பசும்பொன் தேவரை கொலை செய்ய முயற்சித்த இஸ்லாமியர்கள்...

பசும்பொன் கிராமத்துக்கு அருகே இருக்கும் ஊர் அபிராமம். அங்கே இஸ்லாமியர்கள் அதிகமாக வசித்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் பர்மா, மலேசியா போன்ற நாடுகளுக்குப் போய் தொழிலோ, வியாபாரமோ செய்து திரும்பி வந்தவர்கள் பெரும் பணக்காரர்களாக வாழ்பவர்கள்.

அந்த கிராமத்தில் ஒரு சந்தை இருந்தது. வாரம்தோறும் புதன்கிழமை சந்தை கூடும். அது முஸ்லீம்கள் அதிகம் வசிக்கிற பகுதி. சந்தைக்கு வியாபாரம் செய்ய வருகிற இளம் பெண்களை சில முஸ்லீம் இளைஞர்கள் கேலி செய்து வம்புக்கிழுப்பது நடந்து வந்தது.

ஒரு நாள் மோர் விற்ற ஒரு பெண்ணிடமும், காய்கறி விற்கப் போன பெண்ணிடமும் அவர்கள் மோசமாக நடந்து கொண்டார்கள். அந்த இளைஞர்களைத் தட்டிக் கேட்கும் அளவுக்கு அங்கே யாருக்கும் தைரியமும் இல்லை.

எனவே பாதிக்கப்பட்ட பெண்கள் பசும்பொன்னுக்கு வந்தார்கள். தேவரிடம் முறையிட்டார்கள். "நான் பார்த்துக்கொகிறேன். போய் வாருங்கள்" என்று அந்தப் பெண்களை அனுப்பி வைத்தார் தேவர்.

எம்மதத்தினராயினும் சரி தாய்க்குலமாகிய பெண் இனத்திற்கு இழைக்கப்படும் அநீதியைத் தாங்கமுடியாத உள்ளம் கொண்ட தேவர். அந்த பெண்கள் சொல்வதைக் கேட்டு மனம் வேதனை அடைந்தார்.

பிறகு அடிக்கடி அபிராமம் போய் வருகிற சிலரை அழைத்து விசாரித்தார். அந்தப் பெண்கள் சொன்னது உண்மைதான் என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டார். முதல் வேலையாக அபிராமம் கிராமத்தில் இருக்கும் பள்ளிவாசல் பெரியவர்களுக்கு ஆள் மூலம் தகவல் சொல்லி அனுப்பினார்.

உங்கள் ஊர் இளைஞர்கள் சிலர் சந்தைக்கு வரும் இளம் பெண்களிடம் தகாத முறையில் நடப்பதாகக் கேள்விப்பட்டேன். அவர்களைக் கண்டித்து வையுங்கள். இனிமேல் இது போல் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று.

ஆனால் தேவர் சொன்ன எதுவும் அபிராமத்தில் நடக்கவில்லை. அந்த இளைஞர்களுடைய அட்டகாசம் இன்னும் அதிகமானது. அவர்களைக் கட்டுப்படுத்த என்ன செய்வது என்று யோசித்து ஒரு முடிவெடுத்தார் தேவர்.

அபிராமத்தில் இருந்த இந்து சமயத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்று கூடினார்கள். #இந்து_மகா_சபை" ஒன்றை அமைத்தார்கள். அதற்கு தலைவர் முத்துராமலிங்க தேவர். முஸ்லீம் இளைஞர்களுடைய போக்கைக் கண்டிக்க சில அதிரடி நடவடிக்கைகளில் இறங்கினார் தேவர். சமூக ஒத்துழையாமை முஸ்லீம் மக்களின் நிலங்களில் இந்துக்கள் யாரும் வேலை செய்யக்கூடாது. இஸ்லாமியர்களின் கடைகளில் பொருள்கள் வாங்கக்கூடாது.

தேவர் பேச்சுக்கு மறு பேச்சு ஏது? அவர் சொன்னது அப்படியே நடந்தது. அதனால் பொருளாதாரரீதியாக மிகப் பெரும் சிக்கல்களை முஸ்லீம்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நிலைமை இன்றைக்குச் சரியாகிவிடும் நாளைக்குச் சரியாகிவிடும் என்று காத்திருந்த முஸ்லீம்கள் ஏமாந்து போனார்கள்.

அபிராமத்தில் இருந்த இந்துக்கள் தேவரின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அவர் சொன்னபடியே நடந்து கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் பொறுக்க மாட்டாதவர்களாக "தேவர் மத துவேஷத்தை வளர்க்கிறார்" என்று அபிராமம் ஊரைச் சேர்ந்த முஸ்லீம்கள் ஆங்கிலேய அரசுக்குத் தந்தி மேல் தந்தி கொடுத்தனர்.

ஏற்கெனவே தேவர் மீது ஒரு கண் வைத்திருந்த ஆங்கிலேய அரசு இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தது. தேவர் மீது வழக்கு தொடர்ந்தது. செக்ஷன் 107. தேவர் சமூகக் கலவரத்தைத் தூண்டினார் என்பது வழக்கு.

அந்த வழக்கு ஒர் ஆண்டுக்கும் மேலாக நடந்தது. முதுகுளத்தூர் சப் கலெக்டர் முன்னால் நடந்த விசாரணையின் போது ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டார்கள். தேவருக்காக வாதாட அன்றைக்குப் பிரபலமாக இருந்த மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.ஆர். வெங்கட்ராமய்யர் ஆஜரானார்.

சப் கலெக்டர் தேவரிடம் ஜாமீன் கேட்டுத் தீர்ப்பளித்தார். பிறகு வழக்கு அப்பீல் செய்யப்பட்டு ராமநாதபுரம் மாவட்ட நீதி மன்றத்துக்குப் போனது. அப்பீலை விசாரித்தார் நீதிபதி. தீர்ப்பு சொன்னார். "அநீதியை எதிர்ப்பதற்காக சமூக ஒத்துழையாமையை அறவழியில் நடத்துவதில் எந்தத் தவறும் இல்லை"

அதோடு தேவர் மீதிருந்த ஜாமீன் வழக்கையும் ரத்து செய்தார். அதற்குப் பிறகும் அபிராமத்தில் சமூக ஒத்துழையாமை தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. அதே சமயத்தில் தேவரைக் கொலை செய்ய ஒரு முயற்சியும் நடந்தது.

பசும்பொன் தேவர் அந்தக் காலத்திய செவர்லெட் கார் ஒன்றை வைத்திருந்தார். இப்போது போல அதன் மேற்புறம் இரும்பு ஷீட் போட்டதல்ல. மேல்பாகம் கேன்வாஸ் துணியால் ஆனது.

ஒரு நாள் முத்துராமலிங்க தேவரும் காங்கிரஸ் தலைவரும் பேச்சாளருமான மட்டப்பாறை வெங்கட்ராமய்யரும் அந்த காரில் வந்து கொண்டிருந்தார்கள். இருவரும் பின் சீட்டில் அமர்ந்திருந்தார்கள். ரோட்டில் கார் போய்க் கொண்டிருந்தது. எதிரே தூரத்தில் சில மாட்டு வண்டிகள் திடீரென்று நடு ரோட்டுக்கு தேவர் வரும் காரை மறிப்பது போல் குறுக்காக வந்து நின்றன.

கிட்டத்தட்ட பத்து மாட்டு வண்டிகள். வண்டிக்குள் ஐம்பதுக்கும் மேற்ப்பட்டவர்கள் ஆயுதங்களுடன் காத்திருந்தார்கள். கார் நின்றதும் சூழ்ந்துகொண்டு தேவரைத் தாக்குவது எதிரிகளின் திட்டம்.

காரை ஒட்டிய டிரைவர் பெயர் ராஜு திறமைசாலி. நிலைமையின் தீவிரத்தைச் சட்டென்று புரிந்து கொண்டார். அடுத்த கணம் ரோட்டிலிருந்து இறங்கியது கார். காட்டுப் பகுதிக்குள் புகுந்து வேகமெடுத்தது. மாட்டு வண்டிகள் நிற்கும் இடத்தையும் தாண்டி கிட்டத்தட்ட ஒரு பர்லாங் தூரம் கடந்தபின் ரோட்டில் ஏறியது. ஆனாலும் பின்னால் சிலர் விரட்டி வந்தார்கள்.

ஒருவன் தன் கையில் இருக்கும் வேல் கம்பால் குத்தினான். அது காரின் மேல்புறத் துணியைக் கிழித்துக் கொண்டு உள்ளே வந்தது. தேவரும் வெங்கட்ராமய்யரும் பின் சீட்டில் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு நடுவே வந்து சீட்டில் குத்தியது வேல் கம்பு. அதே வேகத்தில் உருவிக் கொண்டு பின்னால் போய்விட்டது.

வெங்கட்ராமய்யர் மிரட்சியோடு கேட்டார். "தேவர்வாள்" நம்மரெண்டு பேருக்கும் நடுவுல ஒரு முழு நீளத்துக்கு இப்போ வந்துட்டுப் போச்சே வேல் கம்புதானே? ஆமாம். அது உங்களுக்கு வரலை. என்னை கொல்ல வந்தது.

இந்தச் சம்பவம் நடந்த பிறகு இரவு இரண்டு மணிக்கு அருப்புக்கோட்டைக்கு வந்து சோந்தார் தேவர். அவர் எப்போதும் தங்குகிற அகம்படியார் மகாலில் தங்கினார். அவர் முகத்தில் அவரைக் கொல்ல நடந்த சதி குறித்து சிறு பதற்றம் கூட இல்லை. எப்போதும் போல சகஜமாக வேண்டியவர்களிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு படுக்கப் போய்விட்டார்.

தேவர் எந்த காலத்திலும் வேற்று மதத்தவர்களுடன் வேறுபாடு காட்டியது கிடையாது. அபிராமம் ஊரில் தகாத வேலைகளில் இறங்கிய முஸ்லீம் இளைஞர்களைக் கண்டிக்கத்தான் சமூக ஒத்துழையாமை என்கிற அஹிம்சை ஆயுதத்தை எடுத்தாரே தவிர வேறு எந்த இடத்திலும் அதை அவர் பயன்படுத்தவில்லை.

முஸ்லீம் இன மக்கள் பெருமளவில் வாழும் கமுதி, முதுகுளத்தூர், பேரையூர், பெருநாழி போன்ற இடங்களில் எல்லாம் அவர் சமூக ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தவில்லை. அபிராமம் முஸிலீம் இன மக்கள் தேவர் போராட்டம் நடத்திய போது தங்களுக்கு ஒத்துழையாமைபடி அந்த ஊர்களில் இருந்த முஸ்லீம் பெரியவர்களிடம் கேட்டார்கள்.

இது உங்கள் ஊர் பிரச்சனை. தவறு உங்கள் ஊர் இளைஞர்களிடம் இருக்கிறது. ஆரம்பத்திலேயே நீங்கள் அதைத் தட்டிக் கேட்டிருந்தால் பிரச்சனை இந்த அளவுக்கு முற்றியிருக்காது. அதையும் இஸ்லாத்தையும் சம்பந்தப்படுத்தாதீர்கள். எங்களால் உங்களுக்கு ஒத்துழைப்புக் கொடுக்க முடியாது என்று சொல்லி மறுத்துவிட்டார்கள் அந்த ஊர்களில் இருந்த முஸ்லீம் பெரியவர்கள்.

ஒரு கட்டத்தில் அபிராமம் சந்தை வேறு ஒர் இடத்துக்கு மாற்றப்பட்டது.
முஸ்லீம் சமூகமும் நியாயமுணர்ந்து நடந்து கொண்டது. தமது மதத்தைச் சேர்ந்த பெண்களுக்கு ஏற்பட்ட இழிவைப் போக்கினார். தேவர் #மதத்தொண்டிலும் வெற்றிவாகை சூடினார்.

அதன் பிறகு தேவர் மறைந்த பின்னர், இந்த நிகழ்வை மறைக்க, தேவர் இஸ்லாமியத் தாயிடம் பால் குடித்ததாக கட்டுகதைகள் இஸ்லாமியர்களால் பரபப்பட்டதது

தேவரின் கூடவே இருந்த பெருமாள் அவர்கள் எழுதிய குறிப்பில் தேவர் சிறு வயதில் தாயை இழந்தபிறகு தனது பெரிய தாயார் மீனலோசினியிடம் தான் பால் குடித்து வளர்ந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.

புத்தகம்: பாலூ சத்யாவின் தேவர் ஒரு வாழ்க்கை
பக்கம் 77, 78, 79, 80

புத்தகம்: பேராசிரியர் ஞானவிஜயனின் பசும்பொன் தேவர்
பக்கம் 61, 62, 63

புத்தகத்தின் பக்கங்கள் புகைப்படங்களாக பதிவிட்டுள்ளேன்.



                                 






No comments:

Post a Comment

ஸ்ரீமத் பாகவதம் (தமிழ்)

  Srimad-Bhagavatam  1 Srimad-Bhagavatam   2 Srimad-Bhagavatam   3 Srimad-Bhagavatam    4 Srimad-Bhagavatam   5 Srimad-Bhagavatam   6 Srimad...