Monday 25 June 2018

குறையுள்ளவையா தமிழ் எழுத்துக்கள்?


குறையுள்ளவையா தமிழ் எழுத்துக்கள்?

தமிழ் எழுத்துக் குறிகள் மிகவும் குறையுடையன வென்பது அன்னியர்களுடைய அபிப்ராயம். க, ச, ட, த, ப இவ்வைந்து தமிழ் எழுத்துக் குறிகளும் முறையே क, ख, ग, घ, ह; च, छ, ज, झ, श, स; ट, ठ, ड, ढ; त, थ, द, ध; प, फ, ब, भ; இந்த இருபத்தி மூன்று வடமொழி எழுத்துக்களுக்குப் பதிலாக நிற்பது பெருங்குறை என்பார்கள். மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்த திராவிட பாஷைகளில் இவ்விருபத்து மூன்று எழுத்துக்களுக்கு இருபத்து மூன்று குறிகள் வழங்குகின்றன. ஆனால் தமிழில்,
க என்பது क, ख, ह என்ற மூன்று உச்சரிப்புகளையும் குறிக்கும்.
ச என்பது श, च, ज என்ற மூன்று சப்தங்களுக்கும் நிற்கும்.
ட என்பது ट, ड என்ற இரண்டு வகை உச்சரிப்பும் கொள்ளும்.
த என்பது त, द என்று இரண்டு வகையாகவும் உச்சரிக்கப் படும்.
ப என்பது प, ब என்று இரண்டு எழுத்துக்களுக்கும் குறியாகும்.
ஆக இந்த ஐந்து எழுத்துக்கள் பன்னிரண்டு உச்சரிப்பு கொள்ளும்.
மற்ற பதினோரு உச்சரிப்புகள் தமிழில் கிடையவே கிடையாது. தமிழில் இராத உச்சரிப்புகளுக்குத் தமிழில் குறிப்புகள் இல்லாதது ஒரு குறையாகாது. ஒப்புக் கொள்ளப் பட்ட குறையை மட்டில் ஆராய்வோம். உண்மையில் சரியாக ஆராய்ந்து பார்த்தால் இந்த குறை குறுகி குறுகி முற்றிலும் ஒரு விதிக்கு உட்பட்டுப் போவதைக் காண்போம். எவ்வாறென்பதைப் பார்க்கலாம்.
க என்பது மொழியின் முதலெழுத்தாக வந்தால் தான் क உச்சரிப்பு. மொழியின் இடையிலோ, ஈற்றிலோ வந்தால் ह – உச்சரிப்புக் கொள்ளும். உதாரணம்: களவு, கொடுமை, காடு, கிளி, குதிரை; பகுதி, தகுதி, விகுதி, வகை, ஆகாரம், அதிகம், ஆகும், வருக என்பன. மெல்லின எழுத்துடன் சேர்ந்து வந்தால் ग உச்சரிப்புக் கொள்ளும். பங்கு, தங்கம், வாங்கலாம் முதலியன. க இரட்டித்தால் சுத்த வல்லின ஓசை பெறும்; பக்கம், அக்கா, தக்கவன்.
ச என்பது மொழியின் முதலிலும் இடையிலும் ஈற்றிலும் श உச்சரிப்புத்தான் கொள்ளும்; செவ்வாய், சுவை, சும்மா, சாதல், பசி, மாசு, கொசு, தசை, ஆசான் முதலியவாறு.
இரட்டித்தால் தான் च, வல்லோசை பெறும். அச்சம், பச்சை, தச்சன், கச்சை, அச்சு, பிச்சை முதலியன. மெல்லினத்துடன் வந்தால் ज ஓசை பெறும். பஞ்சம், இஞ்சி, தஞ்சை முதலியன.
ட என்பது ड உச்சரிப்புத்தான். ट என்கிற உச்சரிப்பு இரட்டித்தால் தான் வரும். கட்டு, பட்டை, கட்டை, கட்டில், மட்டு, இடு, ஆடு, ஓடு, கடை, வடக்கு, தடை முதலியவைகளில் ட என்பது உச்சரிப்பே. மெல்லினத்துடன் ड என்றாகும் என்பது சொல்லாமலே விளங்கும். பண்டம், வண்டி, கூண்டு முதலியன.
த என்பது மொழியின் முதலில் त உச்சரிப்பு; இடையிலும் இறுதியிலும் द உச்சரிப்பு. தகப்பன், தாய், தித்திப்பு, தோல், துவையல், தையல்.
அது, இது, பொது, பாதி, பகுதி, காதம், கதை, மாதம், காதல். இரட்டித்தால் त உச்சரிப்பு பெறும். மெத்தை, கத்து, வாத்து, அத்தி முதலியன. மெல்லினத்துடன் வரின் द உச்சரிப்பு; வந்து, கந்தல், கூந்தல், மந்தி.
ப என்பது மொழியின் முதலில் प உச்சரிப்பு; பாலம், பசு, பொது, பூட்டு. இரட்டித்தாலும் प உச்சரிப்பு; அப்பம், கப்பல், தித்திப்பு. அப்போது இரட்டிக்காமல் இடையிலும் ஈற்றிலும் வந்தாலும், மெல்லினத்துடன் வந்தாலும் ब உச்சரிப்பு. கம்பம், வம்பு, அம்பு, செம்பு, உருபு, மரபு, திரிபு, மார்பு.
றகர ஒற்றுக்குப் பின்வரும் வல்லின எழுத்தை இரட்டித்ததாகவே கொள்ளவேண்டும்; ஆகையால் அது வல்லோசை பெறும். ஆகவே பொதுவாக வல்லின எழுத்துக்கள் மொழியின் முதலிலும், ற-கர ஒற்றுக்குப் பின் அல்லது இரட்டிக்கும்போதே வல்லோசை பெறும். மற்ற இடங்களில் உண்மையான வல்லோசை பெறாது. இடையிலும் ஈற்றிலும் க என்பது ஹ ஆகும். ச என்பது श எழுத்தே ஆகும். ற-கருத்திற்குப் பின் அல்லது இரட்டித்தால் தான் च ஆகும். ட என்பது ड
எழுத்தே ஆகும். இரட்டித்தால் தான் ट ஆகும்.
மெல்லினத்திற்கு அடுத்தாற்போல் எல்லா வல்லின எழுத்துக்களும் முறையே ग, ज, ड, द, ब ஆகும்.
வடமொழிச் சொற்களை தமிழில் கொள்ளும் போது, அவைகளின் சம்ஸ்க்ருத உச்சரிப்பை வைத்துச் சொல்ல வேண்டும் என்பது கூடாது. அது தமிழ் முறையாகாது. மணிப்பிரவாள மாகும். வருஷம் என்று தான் தமிழில் சொல்ல வேண்டும். வர்ஷம் என்பது தமிழல்ல. மாதம் என்று சொல்லுவது தான் சரி. மாஸம் என்பது சுத்த சம்ஸ்க்ருதமே ஆகும்; தமிழாகாது. அவ்வாறே, துவேஷம், மாமிசம், சீதை, அருச்சுனன் முதலியன.
புராதனமாகத் தமிழில் வழங்கும் வடமொழிச் சொற்களுக்குத் தமிழ் உச்சரிப்புக் கொடுத்துச் சொல்லுவதே முறையாகும். த்வேஷம், மாம்ஸம், ஸீதா, அர்ஜூனன் என்று உச்சரிப்பது தமிழல்ல.
இதை ஞாபகத்தில் வைத்தால் மேலே நான் குறிப்பிட்ட விதிகள் தமிழில் கலந்த வடமொழிச் சொற்களுக்கும் பொருந்தும் என்பது விளங்கும். சீதை என்பதை தமிழில் शीतै என்றுதான் சொல்லுகிறோம். सीता அல்லது सीतै என்பது தமிழர் முறையாகாது.
கதை என்பதை गदै என்று உச்சரிப்பதுதான் தமிழ் முறை. ‘அதை’, ‘கதை’, ‘விதை’, ‘மதி’, ‘அன்னையும் பிதாவும்’ இவைகளில் எல்லாம் தமிழர் த என்பதைத் தெரிந்தும் தெரியாமலும் द வாகத்தான் உச்சரிப்பார்கள். அவ்வாறு உச்சரிப்பது தமிழ் முறையில் சரியேயாகும். நான் கூறியிருப்பது வடமொழிப் பயிற்சி அடைந்தவர்களுக்கும் தெலுங்கு, கன்னடம் வழங்கும் பிரதேசங்களில் வசிக்கும் தமிழர்களுக்கும் சில விஷயங்களில் வித்தியாசமாகத் தோன்றலாம்.
தாகம், தசரதன், தமயந்தி, துரோணன் என்பவையில் மொழியில் முதலில் நிற்கும் த-கரத்தை தமிழர் त – ஆகவே உச்சரிப்பார்கள்; அவ்வாறு உச்சரிப்பதும் சரியேயாகும். द என்று உச்சரிப்பது வடமொழிப் பயிற்சியினால் ஏற்பட்ட வழக்காகும். தமிழில் நன்றாகப் பதியாத வடமொழிச் சொற்களின் உச்சரிப்பு சம்ஸ்க்ருதத்தை ஒட்டியே நிற்கும். அச்சொற்களுக்கு மேற்குறித்த விதிகள் பொருந்தா.
ஆகவே தமிழில் உள்ள உயிரெழுத்துக்களும் மெல்லின இடையின எழுத்துக்களும், குறைவின்றி இருக்கின்றன. வல்லின எழுத்துக்கள் மேற்கண்டவாறு சில விதிகளுக்குட்பட்டு, மாறுபாடு இல்லாமல் இடத்தை அனுசரித்து உச்சரிக்கப் பெறுவதால் அவ்வகையிலும் கூறப்படும் குறையானது உண்மையில் குறையாகாது.
தமிழ்ச் சொற்களுக்கும் தமிழருக்குமே தமிழ் எழுத்துக் குறிகள் உண்டாக்கப் பட்டவை. பிற பாஷைகளைத் தமிழ் எழுத்தைக் கொண்டு எழுதப் புகின் பல குறைகள் தோன்றும். அதைக் கொண்டு தமிழ் எழுத்துக்களை நாம் குறை கூறுவதோ இகழ்வதோ கூடாது.

சம்ஸ்க்ருதம் படிக்கவேண்டிய மொழி

சம்ஸ்க்ருதம் படிக்கவேண்டிய மொழி.. ட்ரான்ஸ்லேட்டர் வச்சு கத்துக்கும்மொழி அல்ல..

ஏன் சம்ஸ்க்ருதமை ட்ரான்ஸ்லேட்டர் வச்சு அர்த்தம் பண்ணாமல்... அதை முறையாக கத்துக்கிட்டு படிச்சு புரிஞ்சுக்க சொல்றோம்னா...

ஏனைய மற்ற மொழிகளிலிருந்து சமஸ்க்ருதம் எவ்வாறு வேறுபடுகிறது என்று புரிஞ்சுக்க அது மிக அவசியம்...
பொதுவாகவே எல்லாருக்கும் தெரியும் சம்ஸ்க்ருதம் குறியீடுகளை அடிப்படையாகக்கொண்டு உருவானது... பிற மொழிகள்போல சொற்களை கொண்டு உருவானது அல்லவென...

நவீன மொழிகள் என்று பெயரளவில் கருதப் படும் பல மொழிகள், உண்மையில் முழுமையற்று, பிற்போக்குத்தனத்துடன், அநாவசியமான பகுதிகளைக் கொண்டுள்ளன என்பது இதைப் படிக்கும் போது உங்களுக்கே புரியும்.
உதாரணமாக அதிகமக்களால் பேசப்படும் மொழி(கள்)னு  கம்பு சுத்தப்படும் மொழிகள் எல்லாம் நாளுக்குநாள் மொழி அகராதின்னு சொல்லப்படும்.. டிக்ஸ்னரி பக்கங்களை அதிகரிச்சிட்டே போகுது.. காரணம்... புதிதாக உண்டாகும் கருவிகளுக்கு தொழில்களுக்கு ஏற்ப... புதிய சொற்களை உண்டாக்கி.. சேர்க்கவேண்டிய அவசியம்...
ஆனால் சம்ஸ்க்ருதம் மாறுபட்டது..
சைக்கிள்ல இருந்து ஸ்பேஸ் ஷட்டில் வரைக்கும் ஒரே அர்த்தம்தான்...

மிகச்சிலவற்றுக்கு மட்டும்... தனிப்பெயர் உண்டு... அதாவது... நூற்றில்  பத்துக்கும் குறைவாக..

ரைட்.... துவங்குவோம்.

நவீன மொழிகளினுள் (ஆங்கிலம், இந்தி, ஜெர்மன் போன்றவை) நுழைந்து விடும் முதல் குறைபாடு, அவைகளுக்கு அடிப்படையாக  உள்ள கொள்கையில் இருந்தே உருவாகிறது.

அந்த கொள்கை: சொற்கள் உலகில் உள்ள பொருட்களை நேரடியாகக் குறிக்கும்.

இது சாதாரணமாக, கவனத்தில் கொள்ளத் தேவை இல்லாத, குழப்பம் தராத ஒரு சிறிய விஷயமாக படும். ஆனால், நவீன கால பேச்சு முறைகளில் உள்ள பல குறைபாடுகளுக்கு இந்த அடிப்படை கொள்கைதான் முக்கிய காரணம் என்பதை மேற்கொண்டு பார்ப்போம். இதே சமயத்தில், சமஸ்க்ருதம் இந்த கொள்கையின் அடிப்படையில் அமைந்தது அன்று. சொல்லப் போனால், சமஸ்க்ருதத்தில், சொற்கள் – உலகில் உள்ள  பொருட்கள்/குழுக்கள் ஆகியவற்றின் பண்பை அல்லது இயல்பை குறிக்கிறதே தவிர எந்த சொற்களும் பொருட்களையோ/குழுக்களையோ தாமே நேரடியாக குறிப்பதில்லை.

இதற்கு என்ன அர்த்தம் என்று கேள்வி பதில் முறையில் சில உதாரணங்களுடன் காணலாம்.

கேள்வி: ஆங்கிலத்தில் அல்லது ஹிந்தியில் மரம் என்பதை எப்படி சொல்வது?
பதில்: ஆங்கிலத்தில் மரத்துக்கு Tree என்று சொல்ல வேண்டும்.ஹிந்தியில் மரத்துக்கு  पेड़ என்று சொல்ல வேண்டும்.

கேள்வி: சமஸ்க்ருத மொழியில் மரம் என்பதை எப்படி சொல்வது?
பதில்: சமஸ்க்ருதத்தில் மரத்துக்கு என்று சொல் எதுவும் இல்லை.

கேள்வி: என்ன, விளையாட்டாக இருக்கிறதே!
பதில்: இல்லை, விரிவாக விளக்குகிறேன். மேலே சொன்னது போல, சமஸ்க்ருதத்தில் சொற்கள் பொருட்கள்/குழுக்கள் ஆகியவற்றின் பண்பை அல்லது இயல்பை மட்டுமே குறிக்கின்றன. எந்த சொற்களும் பொருட்களையோ/குழுக்களையோ தாமே நேரடியாக குறிப்பதில்லை. ஆகையால் “மரம்” என்று நேரடியாக மரத்தைக் குறிக்கும் சொல் எதுவுமே சமஸ்க்ருதத்தில் இல்லை. உண்மையில்  எந்த உலகில் காணும் எந்த பொருளுக்குமே சமஸ்க்ருதத்தில் வார்த்தைகள் இல்லை (சில குறைவான எண்ணிக்கையிலான வார்த்தைகளை தவிர).

கேள்வி: அப்படியானால் வ்ருக்ஷ: என்பது என்ன? நான் வ்ருக்ஷம் என்பது மரம் என்றல்லவா கேள்விப் பட்டேன்!
பதில்: ஆம், சரியான கேள்வி. வ்ருக்ஷ: என்கிற சம்ஸ்க்ருத வார்த்தையை மரத்தைக் குறிக்க உபயோகப் படுத்தலாம். நான் முன்னரே குறிப்பிட்ட படி, சொற்கள் பொருட்கள்/குழுக்கள் ஆகியவற்றின் பண்பை மட்டுமே குறிக்கின்றன. அந்த வகையில் வ்ருக்ஷ: என்னும் இந்த வார்த்தை மரத்தின் ஒரு பண்பை குறிக்கிறது.

வ்ருக்ஷ (वृक्ष) = வெட்டப்பட்டு கீழே தள்ளப் படும் ஒன்று.

இந்த பண்பை உடைய எந்தப் பொருளையும் குறிக்க வ்ருக்ஷ என்ற வார்த்தையை உபயோகப் படுத்தலாம். ஒரு பொருள் பொதுவாக, வெட்டப்பட்டு கீழே தள்ளப் படும் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் அதை குறிக்க வ்ருக்ஷ என்ற சொல்லைப் பயன்படுத்தலாம். வ்ருக்ஷ என்பது மரமாகத் தான் இருக்க வேண்டும் என்னும் அவசியம் இல்லை.

இதே போல சம்ஸ்க்ருதத்தில் மரம் என்பதற்கு பல வார்த்தைகள் உண்டு. உதாரணமாக தரு (तरु), பாத³ப (पादप)  ஆகியவையும் மரத்தையே குறிக்கும். ஆனால் இவையும் கூட நேரடியாகக் குறிப்பதல்ல.

தரு ((तरु)) – மிதக்கும் தன்மை உடையது

பாத³ப span class=”GadyamSmall”>(पादप) –  காலால் பருகுவது

மரத்துக்கு இத்தகைய பண்புகள் இருப்பதால், அதாவது மரம் நீரில் மிதக்கக் கூடியது, அதே போல நீரை தன்னுடைய வேர்களால் (காலால்) உறிஞ்சிப் பருகுவதால், மரத்தைக் குறிக்க இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தலாம். ஏனெனில் மரத்துக்கு இந்த பண்புகள் உண்டு அல்லவா.  இதே பண்புகள் உள்ள வேறு பொருட்கள் இருந்தால் அவற்றைக் குறிக்கவும் இந்த சொற்களைப் பயன்படுத்தலாம் என்று சொல்லத் தேவை இல்லை.

கேள்வி: ஓ.. இப்போது புரிகிறது. அப்படியானால் மரத்தின் கிளையைக் கூட வ்ருக்ஷ என்று அழைக்கலாம் தானே… மரத்தைப் போல கிளையும் வெட்டப் பட்டு கீழே தள்ளப் படும் ஒன்று அல்லவா.
பதில்: நிச்சயமாக. நீங்கள் ஒரு புத்திசாலி.

கேள்வி: எனக்கு எல்லாவற்றையும் சுருக்கமாக முடிவாகக் கூற முடியுமா..
பதில்:  சரி, நவீன கருத்துப் பரிமாற்றத்தில், சொல்லுக்கும் அது குறிக்கும் பொருளுக்கும் ஒன்றுக்கு ஒன்று நேரடியாக இணைக்கப் பட்டிருக்கிறது. ஆனால் சம்ஸ்க்ருதத்தில் சொல்லும் அது குறிக்கும் பொருளுடைய பண்புகளுமே இணைக்கப் பட்டுள்ளன.

கேள்வி: நல்ல ஆராய்ச்சி. இருந்தும் எனக்கு ஒன்று புரியவில்லை. நீங்கள் சொன்னது சுவையாக இருந்தாலும், இதனால் என்ன பயன்? என்ன சொல்கிறேன் என்றால், ஏன் சொற்கள் பொருட்களின் பண்பை குறிப்பதாக சிக்கல் படுத்திக் கொள்ள வேண்டும், சாதாரணமாக சொல் நேரடியாக பொருட்களை குறித்தால் என்ன? இதனால் எல்லாம் என்ன பயன்?

பதில்: இதற்காகத் தான் காத்திருந்தேன். இதோ பதில். உதாரணமாக ஆங்கிலத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஆங்கிலத்தில் சுமார் ஐந்து லட்சம் வார்த்தைகள் (ஆக்ஸ்போர்ட் டிக்ஷனரியில் உள்ளபடி) உள்ளன. இதில் பெரும்பாலும் மற்ற மொழிகளில் இருந்து பெறப்பட்டவை.

கார் (car) என்ற ஒரு வாகனம் கண்டுபிடிப்பதற்கு முன், கார் (car) என்ற சொல்  டிக்ஷனரியில் இருக்கவில்லை. ஆனால் கார் கண்டுபிடிக்கப் பட்டவுடன், யாரோ “கார்” என்ற சொல்லை உருவாக்க அன்றிலிருந்து நாமும் மகிழ்ச்சியாக “கார்” என்ற சொல்லை உபயோகப் படுத்தி வருகிறோம். ஒரு புதிய வார்த்தை உருவானவுடன் அது அகராதியில் சேர்க்கப் பட்டாக வேண்டும். ஏனெனில் அப்போதுதான் புதியவர்கள் அகராதியைப் பார்த்து அந்த வார்த்தையையும் அதன் பொருளையும் படித்து தெரிந்து கொள்ள முடியும். இது எதனால் என்றால், கார் என்பது ஒரு பொருளைக் குறிக்கிறது.

வருங்காலத்தில்  புதியவகை  வாகனம் ஒன்று கண்டுபிடிக்கும் போது, புது வார்த்தை ஒன்றை நாம்   உருவாக்குவோம். அப்போது கார் என்னும் வாகனம் உபயோகத்தில் இல்லாமல் போகும், அதோடு கார் என்ற சொல்லும் வழக்கொழிந்து போகும் (ஏனெனில் கார்களே வழக்கொழிந்து விட்டனவே!).  மறுபடி அந்த புதியவகை வாகனத்துக்கான வார்த்தை அகராதியில் சேர்த்தாக வேண்டும்.   ஏனெனில் ஆங்கிலத்தில் ஒரு சொல் உலகில் உள்ள ஒரு பொருளை நேரடியாகக் குறிக்கிறது.

சமஸ்க்ருதத்திலோ ஒரு சொல் உருவாக்கப் பட்டாலும் அதனை அகராதியில் சேர்க்கத் தேவை இல்லை.  சமஸ்க்ருத இலக்கணம் தெரிந்த ஒருவர் ஒரு சொல்லின் அர்த்தத்தை அகராதியைப் பார்க்காமலேயே ஏறக்குறைய சரியாகச் சொல்லி விட முடியும். ஏனெனில் புதியதாக சமஸ்க்ருதத்தில் கார்களைக் குறிக்க  உருவாக்கப் பட்ட சொல், கார் என்ற வாகனத்தின் ஒரு பண்பை, இயல்பை  குறிப்பதாக இருக்கும்.  சமஸ்க்ருத இலக்கண சூத்திரங்களை வைத்து (வ்யாகரணம்), ஒரு வார்த்தை ஒரு பொருளின் எந்த இயல்பைக் குறிக்கிறது என்று கண்டுபிடித்து விட முடியும். ஆகையால், சமஸ்க்ருத இலக்கணம் தெரிந்த ஒருவருக்கு (பெரும்பாலும்) அகராதியே தேவை இல்லை.

கேள்வி: ஆச்சரியமாக இருக்கிறது. அப்படியானால் சமஸ்க்ருத இலக்கணம் தெரிந்த ஒருவருக்கு வார்த்தைகளின் அர்த்தங்களை தெரிந்து கொள்ள அகராதி தேவைப் படாது என்கிறீர்கள். வேறு ஏதேனும் நன்மை உண்டா?

பதில்: ஆம், வேறு நன்மைகளும் உண்டு. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும், ஆங்கிலத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கை அளவுள்ள வார்த்தைகளே இருக்கும். இப்போது ஐந்து லட்சம் இருக்கிறது. ஆனால் சம்ஸ்க்ருதத்திலோ, இந்த பிரபஞ்சத்தில் எத்தனை இயல்புகள், பண்புகள் உண்டோ, அத்தனை வார்த்தைகள் உண்டு. இந்த பிரபஞ்சத்தில் உள்ள பொருட்களும், அதன் பண்புகளும் எண்ணமுடியாத அளவு இருக்குமெனில், சம்ஸ்க்ருதத்திலும் எண்ணவே முடியாத, எண்ணிக்கையில் அடங்காத அளவு வார்த்தைகள் உண்டு. உலகில் இன்னும் கண்டுபிடிக்கப் படாத பொருட்களுக்கும் சம்ஸ்க்ருதத்தில் வார்த்தைகள் உண்டு. ஏனெனில் புதியதாக கண்டுபிடிக்கப் படும் பொருட்களுடைய பண்புகள் புதியதல்ல. உதாரணமாக மின்விசிரிக்கு சில பண்புகள் உண்டு, அது சுற்றுகிறது, காற்றை வீசுகிறது, காற்றை தள்ள இலை போன்ற அமைப்புகள் இருக்கின்றன. மின்விசிறி கண்டுபிடிக்கப் பட்ட போது, அது புதிய பொருள் என்றாலும், இந்த பண்புகள் புதியது அல்ல. ஆகவே ஒரு பொருள் புதியதாக உருவாக்கப் பட்டாலோ/கண்டுபிடிக்கப் பட்டாலோ, சம்ஸ்க்ருத இலக்கணம் தெரிந்த யாரும் அதன் இயல்பை வைத்து அதற்கு ஒரு பெயரை சூட்ட முடியும், அதே போல சம்ஸ்க்ருத இலக்கணம் தெரிந்த வேறு யாரும், அந்த பெயர் எதனைக் குறிக்கிறது என்று கண்டுகொண்டு விட முடியும்.

கேள்வி: அற்புதம். ஆனால் புரிந்து கொள்ள சற்றுக் கடினமாகத் தான் இருக்கிறது. சுருக்கமாக இது வரை சொன்னதை திரும்ப ஒருமுறை கூற முடியுமா…

பதில்: சரி, சமஸ்க்ருதத்தில் எண்ணிலடங்காத அளவு சொற்கள், அதன் அடிப்படைக் கொள்கையின் காரணமாகவே அமைந்துள்ளன (இதில் பெரும்பாலும் உள்ள சொற்களை புரிந்து கொள்ள அகராதியே தேவைப் படாது!). சமஸ்க்ருத இலக்கண அறிஞர்கள், இலக்கணத்தையும் (Grammar), சொற்பொருளியலையும் (semantics) வேறு வேறாக கருதாமல், இணையான – முரண்பாடுகள் அற்ற ஒரே விஷயமாக கருதினர். ஏனைய மற்ற மொழிகளில் இலக்கணமும், சொற்பொருளியலும் வேறு வேறாக உள்ளன – சமஸ்க்ருதத்தில் அப்படி இல்லை.

நீங்கள் உலகில்  ஒரு பொருளைப் பற்றி  எண்ணும் போது, அதன் இயல்பைக் கொண்டே சிந்திக்கிறீர்கள்; ஏனெனில் ஒரு பொருளின் இயல்பே அதனை மற்றதிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. ஆகையால் ஒரு சாதாரணமாக ஒரு  பொருளைப் பற்றி எண்ணும் போது, அதன் இயல்பு நினைவுக்கு வரும், அதனால் நீங்களே அந்த பொருளின் பெயர் முன்பே தெரியாவிட்டாலும் அதன்  இயல்புக் கேற்ப ஒரு பெயரை சூட்ட முடியும்.

இது வெறும் ஆரம்பம்  தான்.  இந்த தொடரில் வரும் பகுதிகளில் சமஸ்க்ருதம் எவ்வளவு சுருக்கமான,  அழகான, ஒழுங்கான முறையில் அமைந்த, உலகமே வியக்கும் வகையில் அமைந்த ஒரு மொழி என்று பார்ப்போம். ஒரு பொருளின் இயல்பை வைத்து எப்படி அதற்கு பெயரை உருவாக்க முடியும் என்றும் பார்ப்போம்.

இந்தப் பகுதியை ஒரு “சுபாஷித”த்துடன் முடிப்போம்.

भाषासु मधुरा मुख्या दिव्या गीर्वाण भारती
तस्माद्धि काव्यं मधुरं तस्मादपी सुभाषितम

பா⁴ஷாஸு மது⁴ரா முக்²யா தி³வ்யா கீ³ர்வாண பா⁴ரதீ
தஸ்மாத்³தி⁴ காவ்யம்ʼ மது⁴ரம்ʼ தஸ்மாத³பீ ஸுபா⁴ஷிதம்

அதாவது, சம்ஸ்க்ருத மொழி இந்திய மொழிகளில் முதன்மையானது, இனிமையானது, தெய்வீகமானது. இதனால் கவிதையும் அழகாகிறது. நன்மொழிகளும் இனிமையாகின்றன.

– திரு. கௌரவ் ஷா எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு.

குறிப்புகள்:

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப் பட்டுள்ள சிறப்பு பண்புகள் சமஸ்க்ருத மொழியில் மட்டுமே இருக்கின்றன என்று சொல்ல இயலாது. வேறு சில மொழிகளிலும் இச்சிறப்பு இயல்புகள் உண்டு. எனினும் இம்மொழிகளில் இத்தகைய இயல்புகள் மிகவும் அடிப்படை நிலையில் மேலதிக வளர்ச்சி இன்றி உள்ளன. ஆனால் சம்ஸ்க்ருதத்தில் இந்த இயல்புகள் முற்றிலும் வளர்ச்சி கண்டு மொழியின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளன.
சம்ஸ்க்ருத எழுத்தாளர் திரு.ஜகந்நாதன் அவர்கள் இது குறித்து எழுதிய குறிப்பு: பொதுவாக மொழிகளின் சொல்லமைப்பு நடைமுறை உபயோகத்தைப் பொறுத்த வரை மூன்று வகையாக அமையும்.
யோக(योग) என்ற முறையில் இலக்கண விதிகளின் படி அமையும் சொற்கள். உதாரணமாக கும்ப⁴கார​: கும்ப⁴ம்ʼ கரோதி இதி கும்ப⁴கார​: (कुम्भकारः कुम्भं करोति इति कुम्भकारः) – உழுபவன் உழவன்
என்பது போல.
ரூட⁴ (रूढ) = இதற்கு உதாரணம் நூபுரம் (नूपुरम्) – கைவளை. இந்த சொல் எதிலிருந்தும் உருவானதல்ல. எந்த பண்பையும் குறிப்பதல்ல. இந்த சொல்லை பிரிக்கவும் முடியாது.
योगरूढ= पङ्के जायते इति पङ्कजम् யோக³ரூட⁴= பங்கே ஜாயதே இதி பங்கஜம் – சேற்றில் இருப்பது. இது போன்ற வார்த்தைகளில் பிரித்து அர்த்தம் சொல்ல முடிந்தாலும், உபயோகத்தில் அவ்வாறு செய்வதில்லை. அதாவது சேற்றில் இருக்கும் புழு பூச்சி ஆகியவையும் பங்கஜம் என்று அழைக்கப் படமாட்டாது. பங்கஜம் என்றால் தாமரையை மட்டுமே குறிக்கும்.

சமஸ்க்ருத இலக்கண சொற்கள்




சமஸ்க்ருத இலக்கண சொற்கள்


அகர்மக க்ரியா (अकर्मक क्रिया)செயலற்ற வினை (intransitive verb). ஒரு வினையில் செயலும் (action), செயலின் பயனும் செயலாற்றுபவரிடமே இருப்பதால் (फलव्यापारयोरेकनिष्ठतायामकर्मक:) அங்கே செயப்படு பொருள் (object) என்று எதுவும் இருப்பதில்லை. எவை எல்லாம் அகர்மக க்ரியை என்பதற்கு ஒரு ஸ்லோகமும் உண்டு:

वृद्दिक्षयभयजीवितमरणं लज्जाशङ्कास्थितिजागरणम् ।
शयनक्रीडारुचिदीप्त्यर्थं धातुगणं तमकर्मकमाहू ॥
(பாடபேதம்: लज्जासत्तास्थितिजागरणं)

உதா: शिशु: शेते
அதிதே³ஸ²: (अतिदेश:)உபயோகத்தில் நீட்சி; (extended application). பாணிநீய வ்யாகரணத்தில் मत्, वत् போன்ற ஒட்டுகளால், ஒன்றின் பண்பு இன்னொன்றுக்கு நீட்டிக்கப் படுகிறது. இவை அதிதேஸ ஆகும்.
உதா: लोटो लाङ्वत्
அதி⁴கரண (अधिकरण)பேசப்படும்/ஆராயப்படும் விஷயம்;
அதி⁴கார சூத்ர: (अधिकार सूत्र)ஒன்றோ அதற்கு மேற்பட்ட சொல்லில் அமைந்துள்ள இலக்கண விதி. இவ்விதியில் இடம் பெறும் வார்த்தைகள் தானே எந்த பொருளும் தராது. ஆனால் இதற்கு பிறகு வரும் விதிகளுடன் இணைக்கப் படுவதால் பொருள் மிகுந்தது ஆகும். உதா: प्रत्यय:, परश्च
அனுதா³த்த (अनुदात्त)வைதிக சம்ஸ்க்ருதத்தில் எழுத்துக்களை உச்சரிக்கும் ஒரு முறை.
அநுநாஸிக (अनुनासिक)ஒரே சமயத்தில் வாயினாலும் மூக்கினாலும் உச்சரிக்கப் படும் எழுத்துக்கள் உதா: अं
அனுப³ந்த⁴ (अनुबन्ध)இலக்கண விதிகளை அமைப்பதற்காக சொற்களின் முன்போ பின்போ சேர்க்கப் படும் எழுத்துக்கள்
அனுபந்தம் எனப்படும்.
அனுவ்ருʼத்தி (अनुवृत्ति)அஷ்டாத்யாயி இலக்கண நூலில் ஒரு இலக்கண விதியில் இருந்து ஒரு சில வார்த்தைகள் அதற்கு அடுத்த அடுத்த விதிகளுடன் சேர்க்கப் படுவது அனுவ்ருத்தி என்று அழைக்கப் படுகிறது. இந்த வார்த்தைகளின் உபயோகம் கங்கை பிரவாகம் போல (गङ्गास्रोतोवत्) தடையின்றி வரிசையாக அடுத்த விதிகளுக்கு உபயோகப் படலாம். அல்லது தவளைப் பாய்ச்சலாக (मण्डूकप्लुत्यानुवृत्ति) ஒரு விதியில் இருந்து வார்த்தைகள் அடுத்த சில விதிகள் தாண்டி வேறொரு விதி வாக்கியத்தில் உயயோகப் படலாம். சில அரிய நிகழ்வுகளாக ஒரு விதியின் சில வார்த்தைகள் பின்னோக்கி சென்று இதற்கு முன்பு கூறப்படும் விதியிலும் இணையலாம். (सिंहावलोकनम् – சிங்கம் திரும்பிப் பார்ப்பது போல).
அனுஸ்வரம் (अनुस्वर)தேவநாகரி லிபியில் ஒரு சொல்லில் ங், ஞ், ண் போன்ற அநுநாஸிக எழுத்துக்களை குறிக்க, அதற்கு முதல் எழுத்தின் மேலே புள்ளி வைப்பது வழக்கம். இது அனுஸ்வரம் எனுப்படுகிறது.
அந்யோந்யாஸ்²ரய (अन्योन्याश्रय)ஒரு விதியை புரிந்து கொள்ள இன்னொரு விதியும் அந்த விதியை புரிந்து கொள்ள முதல் விதியும் தேவைப் படுமானால் அது அந்யோந்யாஸ்²ரய எனப்படும். இது ஒரு தோஷம்.
அபா⁴வ (अभाव)மறைந்து போதல், இல்லாமல் ஆதல்
அல்பப்ராண(अल्पप्राण)உச்சரிக்க குறைந்த அளவு மூச்சுக் காற்றுத் தேவைப்படும் எழுத்துக்கள்
அவக்³ரஹ(अवग्रह)வேத சம்ஹிதைகளில், பதபாடப் பகுதியில் குறிப்பிடப் பட்டுள்ளபடி, சந்தி விதிகளின் படி சேர்ந்த சொற்கள் பிரிக்கப் படுவது அவக்³ரஹ எனப்படும்.
அவச்சே²த³ (अवच्छेद)குறை, ஒரு குறிப்பிட்ட அளவிலான பயன்பாடு.
அவயவ (अवयव)ஒரு பகுதி, அங்கம்
அவஸான (अवसान)நிறுத்தம், pause, termination
அபப்⁴ரம்ʼஸ² (अपभ्रंश)சம்ஸ்க்ருத வார்த்தைகளின் தேய்ந்த வழக்கு; வட்டார வழக்குகள் போன்றவை.
அயோக³வாஹ (अयोगवाह)அநுஸ்வரம், விஸர்க்கம், ஜிஹ்வாமூலியம் (ஹ்க..), உபத்மாநியம் போன்றவை பொதுவாக அயோக³வாஹ என்று அழைக்கப் படுகின்றது. இவ்வெழுத்துக்கள், வேறொரு எழுத்தைச் சார்ந்தே ஒலிக்கும்.
அனுஸா²ஸன (अनुशासन)பாரம்பரிய வழியில் உள்ள குறிப்பு – வழிமுறை. ஒரு விஷயத்தை ஆராய்தல்.
அந்வய (अन्वय)அந்வயம் என்பது ஒரு செய்யுள் அல்லது வாக்கியத்தை புரிந்து கொள்ள மேற்கொள்ளும் முயற்சி. இது தண்டாந்வயம், கண்டாந்வயம் என்று இரு வகை உண்டு. தண்டாந்வயம் என்பது வாக்கியத்தில் உள்ள சொற்களின் வரிசை முறையிலேயே அர்த்தத்தை புரிந்து கொள்ளுதல். கண்டாந்வயம் என்பது வாக்கியத்தில் உள்ள சொற்களை இடம் மாற்றி அர்த்தத்தை புரிந்து கொள்ளுதல்.
அபேக்ஷா (अपेक्षा)ஒரு விஷயத்தை பொருத்த வரை உள்ள விளக்கம்.
அபவாத³ (अपवाद)ஒரு விதிக்கு எதிராக விதிவிலக்கு சூத்திரம் அபவாதம் எனப்படும். விதிவிலக்கிற்கு விதி விலக்கு ஏற்படுவதும் உண்டு. அது அபவாதப்ரதிஷேதம் எனப்படும்.
அவ்யய (अव्यय)ஆண்பால், பெண்பால் போன்ற எந்த பாலினமாக இருந்தாலும், எந்த காலத்திலும், எந்த வேற்றுமையிலும் மாறாமல் இருப்பது அவ்யயம் ஆகும். இதற்கு காசிகாவில் ஒரு விளக்கம் ஸ்லோக வடிவில் உள்ளது:

सदृशं त्रिषु लिङ्गेषु, सर्वासु च विभक्तिषु |
वचनेषु च सर्वेषु यन्न व्येति तदव्ययम् ।
ஆக்²யாத (आख्यात)தாது (வேர்ச்சொல்) அல்லது வினைச்சொல்
ஆத்மநேபதி³ (आत्मनेपदि)வினைச்சொற்களில் ஒரு வகை. மற்றொரு வகை பரஸ்மைபதி. ஆத்மநேபத வினைகளில், அந்த வினையின் பயன் செய்பவரையே சேருவதாக இருக்கும் என்று கூறப் படுகிறது.
ஆதே³ஸ² (आदेश)ஒரு சொல்லின் இடத்தில் அதற்கு பதிலாக வேறொரு சொல் பயின்று வருவது ஆதேசம் ஆகும்.
ஆக்²யாத (आख्यात)தாது (வேர்ச்சொல்) அல்லது வினைச்சொல்
ஆஸ்ய (आस्य)உடலில் சொல் உருவாகும் இடம் (தொண்டை, மூக்கு போன்றவை)
இத் (इत्)பேச்சு மொழியில், வழக்கத்தில் இல்லாத வகையில் இலக்கணத்தை இயற்றும் வசதிக்காக ஒரு சொல்லுடன் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்கள் சேர்க்கப் படும் போது அவை இத் எனப்படும்.

உபதே³ஸ² (उपदेश)
முதன் முதலில் ஒரு ஆசிரியரால் உபதேசிக்கப் பட்டது. சம்ஸ்க்ருத இலக்கணத்தில் பாணினி, காத்யாயனர், பதஞ்சலி, ஆகிய மூன்று முனிவர்களும் கூறியவை உபதேசம் எனப்படுகிறது.
உபஸர்க³ (उपसर्ग)சொற்களின் முன்னால் சேர்க்கப்படும் சிறிய முன்னொட்டு (prefix). உபசர்க்கங்கள், வேர்ச்சொல்லின் அர்த்தத்தில் இருந்து முற்றிலும் மாறான அர்த்தத்தையும் கூட தரக்கூடும். இதை விளக்க கீழ்க்கண்ட ஸ்லோகம் பொதுவாக குறிப்பிடப் படுகிறது.
उपसर्गेण धात्वर्थो बलादन्यत्र नीयते।
प्रहार-आहार-संहार-विहार-परिहार वत् ।।

உபஸர்கே³ண தா⁴த்வர்தோ² ப³லாத³ன்யத்ர நீயதே|
ப்ரஹார-ஆஹார-ஸம்ʼஹார-விஹார-பரிஹார வத் ||
உப⁴யபதி³ன் (उभयपदिन्)ஆத்மநேபதம் மற்றும் பரஸ்மைபதம் இரண்டிலும் இடம் பெரும் வினைச்சொற்கள் உபயபதம் எனப்படும்.
உத்ஸர்க³ (उत्सर्ग)பொது விதி, இதற்கு விதி விலக்கு அபவாதம் எனப்படுகிறது.
உபமா (उपमा)ஒப்பீடு செய்யத் தகுந்த ஒரு உதாரணப் பொருள்
உபமேய (उपमेय)ஒப்பீடு செய்யப் படும் பொருள்
உபலக்ஷண (उपलक्षण)குறிப்பால் உணர்த்துதல்
ஏகாதே³ஸ² (एकादेश)இரண்டு எழுத்துக்களுக்கு பதிலாக ஒரே எழுத்து (ஏகாதேசமாக) உபயோகிக்கப் பட்டால் அது ஏகாதேசம் ஆகும்.


சம்ஸ்க்ருதத்தில் காலங்கள் (Tenses)


காலம் என்பது மாறிக் கொண்டே இருக்கிறது. யோசித்துப் பார்த்தால் நிகழ்காலம் என்று ஒன்றை சுட்டிக் காட்டுவது மிகக் கடினம். ஏனெனில் இந்த நொடி, இந்த க்ஷணம் என்று கூறும் போதே அந்தக் கணம் கடந்து சென்று இறந்த காலம் ஆகிவிடுகிறது. மனிதர்களிடையே உருவான மொழிகள் ஒவ்வொன்றிலும் இந்த காலத்தை, ஒரு செயல் நடைபெற்ற தருணத்தை வெளிப்படுத்த பலவிதமான முறைகளில் வெளிப்படுத்த வார்த்தைகள் உருவாகின்றன.
சம்ஸ்க்ருதம் போன்றதொரு செம்மையான மொழியில் செயல் நடைபெற்ற காலத்தைக் குறிப்பதொடு (Tenses) மட்டும் நின்று விடாமல் அதனோடு ஆணை, ஆசி, எதிர்பார்ப்பு போன்ற செயலுக்கு பின்னுள்ள மனநிலையையும் (Moods) குறிப்பிடும் வகையில் வினைச்சொல் அமைப்பு அமைந்துள்ளது.
சம்ஸ்க்ருதத்தில் மொத்தம் ஏழு விதமான காலங்கள் (Tenses) உள்ளன. இது தவிர ஒரு செயலைப் பற்றிச் சொல்லும்போது என்ன விதமான மனநிலையுடன் நிகழ்த்தப் படுகிறது என்பதையும் வெளிப்படுத்தும் விதமாக மூன்று விதமான மனநிலைகள் (Moods) உள்ளன. ஆக சம்ஸ்க்ருதத்தில் ஒரு செயலைப் பற்றி கூறும்போது மொத்தம் பத்து விதமாக கருத்தை வெளிப்படுத்த இயலும்.
वर्तमाने लट् (3.2.123), परोक्षे लिट् (3.2.115), अनद्यतने लुट् (3.3.15), लृट् शेषे च (3.3.13), लिङ्र्थे लेट् (3.4.7), विधिनिमन्त्रणाऽमन्त्रणाधीष्टसंप्रश्नप्रार्थनेषु लिङ् (3.3.161), लोट् च (3.3.162), अनद्यतने लङ् (3.2.111), आशिषि लिङ् लोटौ (3.3.173), लुङ् (3.2.110), लिङ्निमित्ते लृङ् क्रियाऽतिपत्तौ (3.3.139) ஆகிய பாணிநீய சூத்திரங்கள் காலங்களைப் பற்றியவை.
பாணினியின் இலக்கண சூத்திரங்களில் மிகச்சுருக்கமாக இந்த காலங்களைப் பற்றி குறிக்க வேண்டி, இவற்றின் பெயர்களை இறந்தகாலம் (भूतकाल:), நிகழ்காலம் (वर्तमान काल:) என்று நீண்ட பெயர்களாகச் சொல்லாமல் இரண்டே எழுத்து பெயர்களாக லட், லங் என்று பெயரிட்டுள்ளார். இவை அனைத்தும் ல என்கிற எழுத்தில் துவங்குவதால் லகாரங்கள் என்று பெயர் பெறுகின்றன. பாணினி இலக்கணம் தவிர்த்த வேறு சம்ஸ்க்ருத இலக்கண முறைகளில் இவ்வாறாக காலங்களுக்கு ஈரெழுத்து பெயர்கள் இடும் முறை இல்லை.
tenses
லட் (நிகழ்காலம்), லிட் (நேரில் பார்க்காத இறந்த காலம்), லங் (இன்றைக்கு முன் நிகழ்ந்த இறந்த காலம்), லுங் (சாமான்ய இறந்த காலம்), ல்ருட் (சாமான்ய எதிர்காலம்), லுட் (இன்றல்லாத எதிர்காலம்), ல்ருங் (நிபந்தனை அடிப்படியிலான எதிர்காலம்) ஆகிய காலங்களும், லேட் (விருப்பம்), லிங் (விதி லிங், ஆஸி லிங் – ஆணை, கோரிக்கை போன்றவை), லோட் (ஏவல்/கோரிக்கை) ஆகிய மனநிலைக் குறிப்புகளும் (moods) ஆக லகாரங்கள் அமைந்துள்ளன.
லங், லிங் என்றெல்லாம் நினைவில் வைத்துக் கொள்வது கடினம், அதை சுலபமாக்க ஒரு வழி உண்டு. அதாவது அ, இ, உ, ரு, ஏ, ஒ ஆகிய எழுத்துக்களுடன் ல்-ஐ முதலிலும், ட்-ஐ இறுதியிலும் சேர்க்க ஆறு காலங்கள் கிடைத்துவிடும். (லட், லிட், லுட், ல்ருட், லேட், லோட்). அதே போல அ, இ, உ, ரு வுடன் ல்-ஐயும், ங்-ஐயும் முறையே முன்னும் பின்னும் இணைக்க மீதமுள்ள நான்கும் கிடைக்கும் (லங், லிங், லுங், ல்ருங்).
மேலும் சுலபமாக நினைவில் வைக்க எல்லா லகாரங்களையும் தொகுத்து கூறும் விதமாக ஸ்லோகம் ஒன்று உண்டு:
लट् वर्तमाने लेट् वेदे भूते लुङ् लङ् लिटस्तथा ।
विध्याशिषौ लिङ्लोटौ लुट् लृट् लृङ् च भविष्यतः ॥
***
லட் (वर्तमाने लट् ) – Present
நிகழ்காலத்தைக் குறிக்கும் லட் லகாரம். உதாரணம்: देवदत्त: गच्छति (தேவதத்தன் செல்கிறான்) என்பன போன்ற வாக்கியங்கள். அதே போல என்றும் மாறாத தன்மையுடையவற்றைச் சொல்லும் போதும் லட் லகாரம் உபயோகிக்கப் படுகிறது. உதாரணம்: पर्वता: सन्ति | आत्मा अस्ति |. மலைகள் எத்தனையோ காலங்களாக இருக்கின்றன. அவற்றைப் பற்றி சொல்லும் போது லட் லகாரமே உபயோகிக்கப் படுகிறது. வர்த்தமானம் என்பது இருப்பு, தற்சமயம் இருப்பது என்று பொதுவாக அர்த்தம். இதனை நான்கு விதமாக பிரிக்கிறார்கள்:
प्रवृत्तोपरतश्चैव वृत्तविरत एव च
नित्यप्रवृत्त: सामीप्यो वर्तमानश्चतुर्विध: ||
  • प्रवृत्तोपरत – முன்பே துவங்கி தற்சமயம் தொடருகிற நிலை உதா: मांसं न खादति 
  • वृत्तविरत – தற்சமயம் நடைபெற்றுக் கொண்டு, இனியும் தொடர்கிற நிலை உதா: बाला: क्रीडन्ति 
  • नित्यप्रवृत्त: – எப்போதோ துவங்கி இனி எக்காலத்துக்கும் தொடரும் நிலை உதா: मेरु: तिष्ठति 
  • सामीप्य: – இன்னும் சில நொடிகளில் அடையப் போகிற நிலை உதா: ओदन: सिद्ध: भवति
***
லிட் (परोक्षे लिट्) – Perfect
பேசுபவர் நேரில் பார்க்காத, இறந்த காலத்தில் நடந்த, ஒரு நிகழ்வைப் பற்றிக் கூறும்போது அதற்கு லிட் லகாரம் உபயோகிக்க வேண்டும்.
சகார (चकार) – அவன் செய்தான்,
பபூவ (बबूव) – ஆனான் ஆகியவை லிட் வகையை சேர்ந்தவை.
रामो नाम: राजा बभूव |
இதில் தன்னிலை வினைச்சொற்கள் அமையுமா என்ற விசாரணை இலக்கண ஆசிரியர்களால் எழுப்பப் பட்டு பதிலும் சொல்லப் படுகிறது. ஒருவர் தன் நினைவோடு ஒரு நிகழ்ச்சியை பார்க்காதவராகவோ, செய்யாதவராகவோ இருக்கக் கூடும். சுயநினைவின்றி ஒரு செயலை செய்திருக்கக் கூடும். அதைப் பற்றி பேசுகையில் தன்னிலையில் லிட் பயன்படுத்த முடியும்.
ஸுப்தோ (அ)ஹம்ʼ கில விலலாப (सुप्तो ऽहं किल विललाप)
தூங்கும்போது நான் புலம்பினேன்
இங்கே புலம்பியது சுயநினைவில் அல்ல என்பதால் பரோக்ஷ லிட் காலத்தில் அடங்கும்.
ஒருவர் தான் செய்த செயலை மறுக்கும் போதும் லிட் லகாரம் உபயோகிக்கலாம்.
நா(அ)ஹம்ʼ கலிங்கா³ன் ஜகா³ம| (नाऽहं कलिङ्गान् जगाम।)
நான் கலிங்கத்துக்கு போனதே இல்லை.
ஜகாம என்பது தன்னிலையில் உள்ள லிட் லகார சொல்.
***
லங் (अनद्यतन भूते लङ्) – Imperfect
இன்றைய நாள் தவிர்த்த இறந்த காலம். ஹ்ய: வ்ருʼஷ்டி: அப⁴வத் |(ह्य: वृष्टि: अभवत् |) நேற்று மழை பெய்தது.
அதே சமயம், இன்றோ அல்லது நேற்றோ என்று சேர்த்து சொல்லும் பொது லங் லகாரம் வராது, லுங் வரும். அதே போல அண்மையில் நிகழ்ந்த செய்தி, அது எல்லோரும் அறிந்த ஒன்றாக இருப்பின், பேசுபவர் நேரில் பார்க்காத போதும் அது லங் லகாரத்திலேயே அமையும்.
த³ஸ²ரத²: நாம ராஜா அப⁴வத் | (दशरथ: नाम राजा अभवत् |)
தசரதர் என்ற ராஜா இருந்தார்.
பா³ல: து³க்³த³ம் அபிப³த் | (बाल: दुग्दम् अपिबत् | )
குழந்தை பால் அருந்தியது.
பொதுவாக இறந்த, நிகழ், எதிர் காலங்கள் தான் பல மொழிகளில் காணப்படுகிறது. சம்ஸ்க்ருதத்தில் தான் இன்று நடந்த நிகழ்வு (अद्यतन), இன்று அல்லாத (अनद्यतन) என்று இரு வேறுபாடுகள் இறந்த காலத்திலும், எதிர்காலத்திலும் உண்டு. அதாவது இன்று அல்லாத இறந்த காலம், இன்றைய இறந்த காலம், இன்று அல்லாத எதிர்காலம், இன்றைய எதிர்காலம் என்று நான்கு வகை உண்டு.
***
லுங் (भूत सामान्ये लुङ्) – இறந்த காலம்
கண்ணால் காணாத இறந்த காலம், இன்றைய நாள் தவிர்த்த இறந்த காலம் என்று ஏற்கனவே இரண்டு வகை பார்த்தோம். இரண்டிற்கும் பொதுவாக, எல்லா இறந்தகாலங்களையும் குறிக்க உதவுவது லுங் லகாரம். இருந்தும் இந்த வகை வினைச்சொற்களை அதன் அமைப்பை புரிந்து கொள்வது கடினம் என்பதால் அதிகம் உபயோகிக்கப் படுவது இல்லை.
அத்³ய வ்ருʼஷ்டி: அபூ⁴த் | अद्य वृष्टि: अभूत् | 
இன்று மழை பெய்தது.
ராம: நாம ராஜா அபூ⁴த் | राम: नाम राजा अभूत् |
ராமன் என்ற ராஜா இருந்தார்.
***
லுட் (अनद्यतन भविष्यति लुट्) – First Future
இன்றைய நாளைத் தவிர்த்த எதிர்காலம். பொதுவான எதிர்காலம் ல்ருட் லகாரத்தில் குறித்தாலும் இன்றைய நாளைத் தவிர்த்த ஒரு தினத்தில் நடப்பதை குறிக்க இந்த லுட் லகாரம் வரும். श्व: वृष्टि: भविता |
அதே சமயம் ஒரே சொல்லில் இன்றைக்கோ நாளைக்கோ என்று இரு தினங்களும் குறிக்கும் பொது லுட் லகாரம் பயன்படுத்தப் படமாட்டாது – अद्य: श्व: वा गमिष्यति | (இன்றோ அல்லது நாளையோ என்பதில் லுட் லகாரம் வாராது).
மேலும் எதிர்கால வருத்தத்தினைக் குறிக்கவும் லுட் லகாரம் வரும்.
इयं नु कदा गन्ता, या एवं पादौ निदधाति।
இயம்ʼ நு கதா³ க³ந்தா, யா ஏவம்ʼ பாதௌ³ நித³தா⁴தி|
இப்படி மெதுவாக நடப்பவள் எப்போது போவாள்?
अयं नु कदा ऽध्येता, य एवम् अनभियुक्तः।
அயம்ʼ நு கதா³ (அ)த்⁴யேதா, ய ஏவம் அனபி⁴யுக்த​:|
இப்படி கவனமில்லாமல் இருப்பவன் எப்போது படிப்பான்?
***
ல்ருட் (भविष्यति सामान्ये लृट्) – Second Future
எல்லா எதிர்கால (Simple future) வினைகளுக்கும் பொதுவாக உபயோகிக்கப் படும் லகாரம் இது.
உதா: श्व: गुरुवासर: दीपावली भविष्यति |
***
ல்ருங் (हेतुहेतुमद् भविष्यति लृङ्) – Conditional
ஒரு செயல் நடைபெற்றிருந்தால் என்கிற நிலையில் எதிர்காலத்தைப் பற்றி பேசுவது. பொதுவாக यदि… तर्हि ஆகிய வற்றுடன் இணைந்தே இந்த கால வினைகள் இடம் பெரும்.
உதா: यदि वृष्टि: अभविष्यत् तर्हि सुभिक्षम् अभविष्यत् |
***
லோட் – (लोट्) – Imperative
ஆணை அல்லது கோரிக்கை
ஆணை, கோரிக்கை ஆகிய மனநிலைகளில் லோட் லகாரம் உபயோகிக்கப் படுகிறது. இது லிங் லகாரத்தைப் போன்றே அமைந்தாலும் சிறு வேறுபாடுகளே இவற்றின் நடுவில் உள்ளது.
ப⁴வான் க்³ராமம்ʼ ஆக³ச்ச²து (भवान् ग्रामं आगच्छतु)
நீங்கள் கிராமத்துக்கு வாருங்கள்
அத்ர திஷ்ட²து (अत्र तिष्ठतु)
இங்கே இருங்கள்
***
விதி⁴நிமந்த்ரணாமந்த்ரணாதீ⁴ஷ்டஸம்ப்ரஸ்²நப்ரார்த²நார்தே²ஷு லிங் – (विधिनिमन्त्रणामन्त्रणाधीष्टसंप्रश्नप्रार्थनार्थेषु लिङ्) – Potential & Benedictive
விதி, அழைப்பு (நிமந்தரண), அனுமதி (ஆமந்தரண), மரியாதையுடன் விருப்பத்தை தெரிவித்தல் (அதீ⁴ஷ்ட), வினா எழுப்புதல் (ஸம்ப்ரஸ்ந), வேண்டுதல் (ப்ரார்தநா) ஆகிய மனநிலைகளில் உபயோகிக்கப் படுவது லிங் லகாரம்.
இதில் இரண்டு வகை உண்டு.
  • விதி லிங் (विधि लिङ्) ஆணை, கோரிக்கை, வேண்டுதல் ஆகியவை உதா: भवान् मम सहचरो भवेत् | – நீங்களே என் நண்பராக ஆகட்டும்.
  • ஆசி லிங் (आशिष् लिङ्) – ஆசீர்வாதம் செய்யும் மனநிலை உதா: तव कल्याणं भूयात् | உங்களுக்கு நன்மை உண்டாகட்டும்.
***
லேட் (लिङर्थे लेट्) – Subjunctive (is used only in vedas)
வேதத்தில் விருப்பம்/ஆசீர்வாதம் செய்வது போன்ற மன நிலையில் உபயோகிக்கப் படுகிறது. லௌகிக சம்ஸ்க்ருதத்தில் இதன் பயன்பாடு இல்லை.
பதாதி வித்³யுத் (पताति विद्युत् |) – மின்னல் விழட்டும்
ஜீவாதி ஸ²ரத³: ஸ²தம் (जीवाति शरद: शतम्) – நூறு ஆண்டு வாழட்டும்
***
இவ்வாறு ஒரு வினையை பலவிதமாக லௌகிக சம்ஸ்க்ருதத்தில் சொல்ல முடியும். ஒரு வேர்ச்சொல் ஏழு காலங்கள், மூன்று மனநிலைக் குறிப்புகள், தன்மை – முன்னிலை போன்ற மூன்று திணைகள், அவற்றில் ஒருமை, இருமை, பன்மை என தொண்ணூறு விதங்களில் மாறுகிறது. இவ்வளவு கடினம் எதற்கு என்றால், அதுதான் மொழியின் உச்சம். அதன் அழகு. ஒரு செய்தியை வெளிப்படுத்த இத்தனை வாய்ப்புகளை கொட்டி கொடுக்கிறது இந்த மொழி. புதிய புதிய சொற்கோவைகள் உருவாவதற்கு ஏற்ற மொழியாக, எல்லா மொழிகளுக்கும், எல்லாக் காலத்திலும், எல்லா வகை சிந்தனைகளுக்கும் உதவுவதாக இருப்பதே சம்ஸ்க்ருதத்தின் சிறப்பு.








ஸ்ரீமத் பாகவதம் (தமிழ்)

  Srimad-Bhagavatam  1 Srimad-Bhagavatam   2 Srimad-Bhagavatam   3 Srimad-Bhagavatam    4 Srimad-Bhagavatam   5 Srimad-Bhagavatam   6 Srimad...