Friday 7 February 2020

நாடார் இன வரலாறு எப்படி ஒடுக்கப்பட்டது?


நாடார் இன வரலாறு எப்படி ஒடுக்கப்பட்டது?

நாடர்கள் ஏன் திருவாங்கூர் சமஸ்தானத்தால் கொடுமை படுத்தபட்டனர்?
இதெற்கெல்லாம் யார் காரணம் ?

நாடாண்ட மன்னர்களாகிய நாடார் இனம் ஏன் கொடுமை படுத்தப்பட்டார்கள்

பனைஏறுவது மட்டும் குலதொழில் என நினைத்துகொண்டிருக்கும் நாடார் இளைஞகளுக்கு நாடாண்ட வரலாறு தெரியாமல் போனது எப்படி?

இதற்கெல்லாம் பதிலறிய நாம் 200 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும்.

1814ல் இங்கிலாந்தின் வட அயர்லாந்து பகுதியில், ஒரு ப்ராட்டஸ்டண்ட் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவன் (ஒருமை என்று கருத வேண்டாம். இந்த மரியாதையே அதிகம்.) தான் கால்டுவெல். லண்டன் மிஷன் சொசைட்டி என்ற மதமாற்றும் கிறிஸ்தவ அமைப்பின் உதவியோடு தனது பட்டப்படிப்பை இங்கிலாந்தின் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் முடித்தான்.

1838ல் கால்டுவெல்லை சர்சு அதிகாரியாக சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.
Society of Propagation of the Gospel கால்டுவெல்லை, மதமாற்றம் செய்யும் பொருட்டும், திருநெல்வெலியில் உள்ள இளையான்குடி பகுதிக்கு அனுப்பி வைத்தது.

 திருநெல்வெலியும் சரி, அதன் அருகில் தென் கோடியில் அமைந்துள்ள குமரியும் சரி - இவ்விரண்டு மாவட்டங்களும் நாடார் சாதி மக்களை அதிகமாக கொண்ட பகுதிகள். ஆதலால், கால்டுவெல்லின் மதமாற்றும் கண்கள் நாடார்கள் மீது விழுந்தது.




கிறித்துவ மதம் நாடார்களை பிரித்தது என்பதற்கு சாட்சி இதோ!

நாடார்களை எப்படி மதம் மாற்றுவது?

நாடார்கள் தங்களை தாங்களே இழிவாக கருத வேண்டும். அந்த இழி நிலைக்கு இந்து சமயமே காரணம் என்று திரிக்க வேண்டும். 
இதன் மூலம், இந்து சமயத்தின் மீது ஒரு வெறுப்புணர்வை நாடார்கள் மத்தியில் ஏற்படுத்தி, அவர்களை எளிதாக மதமாற்றிவிடலாம். ஆனால், இவை நடக்க வேண்டும் என்றால், என்ன செய்ய வேண்டும்? அதற்கு, முதலில் நாடார்களின் பூர்வீக வரலாறு குறித்த பெருமிதத்தை அழிக்க வேண்டும். 

அதை தான் கால்டுவெல்லும் செய்தான்!

இதன் முதற்கட்டமாக, 1849ல் "திருநெல்வேலி சாணார்கள்" என்ற 77 பக்க ஆங்கில புத்தகத்தை கால்டுவெல் எழுதினான். இப்புத்தகம் முதலில் கிழக்கிந்திய கம்பனியின் ஆதரவுடனும், பின்னர் 1850ஆம் ஆண்டு Society for the Propagation of Christian Knowledge என்ற அமைப்பின் மூலம் லண்டனில் வெளியிடப்பட்டது.

இப்புத்தகத்தில் கால்டுவெல், நாடார்களை தரைகுறைவாக காட்டுமிராண்டிகளாக சித்தரித்து இருந்தான். "நாடார்களின் பூர்விகம் தமிழகம் அல்ல என்றும், அவர்கள் இலங்கையில் இருந்து பனையேறிறிப் பிழைக்க வந்த வந்தேறிகள்" என்றும் குறிப்பிட்டுள்ளான். 
மேலும், நாடார்கள் கடவுளுக்கு பயப்படுகின்றவர்கள் அல்ல(ஏசுவை நினைத்து எழுதப்பட்வையாக இருக்கலாம்!) என்றும், நாடார்கள் மந்த புத்திகாரர்கள், அடிமைகள், மூர்க்கர்கள், எழுத்தறிவு அற்றவர்கள், மிகவும் தரைகுறைவான பழக்க வழக்கங்களை உடையவர்கள் என்றும், கால்டுவெல் தன் புத்தகத்தில் குறிப்பிட்டான்.

கால்டுவெல்லின் இந்த பொய் பிரச்சாரம் பல வகைகளில் எதிரொலித்தன. எதிரொலிக்கின்றன. இன்று, CBSE பாட புத்தகத்தில் நாடார்களை இழிவு படுத்தியதாக கூறி நாடார் சாதி அமைப்புகள் மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்துகின்றது. ஆனால், அவர்கள் உண்மையில் எதிர்த்து போராட வேண்டியது, கால்டுவெல்லையும், மிஷனரிகளையும் தான். 

ஏன் என்றால், இவர்கள் பரப்பிய கட்டுக்கதைகளைத் தான் வரலாற்று அவனங்களாக கருத்தில் கொண்டு, CBSE புத்தகத்தில் நாடார்கள் குறித்தான இழிவான கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மஷ"நரி"களின் நாடார்கள் பற்றிய பொய் பிரச்சாரம் பிற இந்து சாதியினர் மத்தியிலும் பல வினைகளை உருவாக்கியது. 

அதைப்பற்றி பார்ப்பதற்கு முன், நாடார்கள் இழிவானவர்களா? அடிமைகளா? என்பதை பற்றி பார்போம்.

1921ல் தான் "நாடார்" என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக அரசு மூலம் செயல்பாட்டுக்கு வந்தது. அதற்கு முன் நாடார்கள் சாணார்கள் என்றே அழைக்கப்பட்டனர். சாணார் என்ற சொல், சான்(றோ)றார் என்ற சொல்லின் திரிந்த பேச்சு வழக்காகும். சான்றோர் என்பதின் பொருள், அறப்போர் மரபிலும், ஆட்சிக் கலையிலும் தேர்ந்த தலைமக்கள் என்பதாகும். 





நாடார் என்பதின் அர்த்தம் கூட, நாட்டை ஆள்பவர்கள் என்பது தான். கால்டுவெல் கூறுவதை போல, நாடார்கள் மூர்கர்களாகவோ, அடிமைகளாகவோ இருந்திருந்தால், அவர்கள் "சான்றோர் குலத்தவர்" என்று அழைக்கப்பட்டிருப்பரா?

மிஷனரிமார்கள் தங்கள் மதமாற்ற சுயநலத்திற்காக "சாணார்" என்ற சொல்லை இழிவானதாக பிரச்சாரம் செய்ததன் எதிரொலி, சாணார்கள் அப்பெயரை வெறுத்து, தாங்கள் இனி "நாடார்கள்" என்றே அழைக்கப்பட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அது அரசால் 1921ல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

உண்மையிலேயே நாடார்கள் சேர, சோழ, பாண்டிய நாட்டின் அரச குலத்தை சார்ந்தவர்கள். அரச குலம் என்றால், போர்த் தொழிலையும், குடிகாவலையும் தன் பரம்பரை உரிமையாக கொண்ட குலம் என்று பொருள். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவான் பேஷ்கராக இருந்த நாகம் அய்யா கூட, தனது Travancore State Manual என்ற நூலில், "சான்றோர் சாதியினர், முற்காலத்தில் ஆட்சியாளர்களாக இருந்தவர்கள்" என்றே குறிப்பிட்டுள்ளார்.

இப்போ சொல்லுங்க நாடாரை பிரிச்சது கிறித்துவமதம் தானே. 
இப்படி பட்ட கேவலமான கிறிஸ்துவ மதத்தை அழிக்கனுமா வேண்டாமா சொல்லுங்க நாடார்களே?.?.

ஸ்ரீமத் பாகவதம் (தமிழ்)

  Srimad-Bhagavatam  1 Srimad-Bhagavatam   2 Srimad-Bhagavatam   3 Srimad-Bhagavatam    4 Srimad-Bhagavatam   5 Srimad-Bhagavatam   6 Srimad...