Tuesday, 24 April 2018

ஆஸிபா யாரால் கொலை?

ஆசிபா கொலையின் மர்ம முடிச்சுகள்! நடந்தது என்ன? ஒரு கள ஆய்வு!


கத்துவாவிலிருந்து நேரடி கள ஆய்வு: விசாரணையின் முடிவை கிராமத்துவாசிகளால் ஏன் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை? மிக விரிவான அலசல்.
இதுவரை கத்துவா வழக்கு சந்தித்த திருப்பங்களையும், ஜம்மு & காஷ்மீர் குற்றக்கிளையின் மூலம் பதிவு செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் எழுப்பப்பட்ட கேள்விகளையும் அது சார்ந்த உண்மைகள் அனைத்தையும் மிக விரிவாக கள ஆய்வு செய்து இங்கே தொகுத்துள்ளோம்.
சஞ்சி ராம், ஆறு சகோதரிகளுடன் பிறந்த ஒரே சகோதரன், திருமணமான இரண்டு பெண்களுக்கு தகப்பன். பெண்கள் சூழப்பிறந்து வளர்ந்த இந்த நபர் தான் இன்று இந்திய தேசத்தின் நினைவில் இருந்து அகலாத அரிதினும் அரிதான குற்றத்தை ஒரு சிறு பெண் குழந்தைக்கு எதிராக ஒரு கோஷ்டியுடன் நிகழ்த்தியிருக்கிறான்
என்று குற்றம் சுமத்தப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை அந்த பகுதியை விட்டு விரட்டவும், அவர்களுக்குள் ஒரு பயத்தை விதைக்கும் விதமாகவும், குஜார்-பக்கெர்வல் என்கிற நாடோடி இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த 8 வயது சிறுமியை எந்த வித இரக்கமுமின்றி, மிக வன்மையான முறையில் கடத்த
திட்டமிட்டிருக்கிறான். அந்த கேவலமான திட்டத்தை செயல்படுத்தியதன் மூலம் அவனின் ஒழுக்கக்கேடான பண்பு கண்டனத்திற்குரியதாகிறது.
சஞ்சி தன்னுடைய குல தெய்வங்களின் உறைவிடமான தேவஸ்தானத்தை இந்த குற்றத்திற்கு தேர்ந்தெடுத்ததன் மூலம் இந்த குற்றம் மேலும் புத்துயிர் பெற்று சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இந்த புனித இடத்தில் அவன் பல ஆண்டுகளாக பூசாரியாக இருந்து வந்துள்ளான். அத்துடன் கதை முடிந்துவிடவில்லை. தன்னுடைய சகோதரி மகனை இந்த குற்றத்தின் கதாநாயகனாக சேர்த்து கொண்டிருக்கிறான். இவருடைய மகன் தூரத்திலிருக்கும் மீருட்டில் படித்து கொண்டிருந்துள்ளான். இந்த குற்றத்தின் தொடர்ச்சியாக, அவனும் இந்த சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் பின்னாளில் உடந்தையாக சேர்ந்துள்ளான்.
இந்த வழக்கின் பிடி மிக இருக்கமாக அவர்களை துரத்திய போது, சஞ்சி அவனுடைய சகோதரி மகனை சிக்க வைக்க முயற்சித்தபோது; அழுத்தம் தாங்காமல் முட்டையென உடைந்து சிதறி, கத்தி கதறி அனைத்து உண்மைகளையும் அவன் காவல் துறை அதிகாரியிடம் தெரிவித்து விட்டான். இந்த வாக்குமூலம் தான்
குற்றம் சுமத்தப்பட்ட எட்டு நபர்களையும் கைது செய்ய காரணமாக இருந்தது.
சில மாதங்கள் முன்பு வரை பிரபலமாகாமல் இருந்த கத்துவா பலாத்கார வழக்கு தொடர்பாக பதியப்பட்டிருந்த குற்றப்பத்திரிக்கையில் இடம்பெற்றிருந்த அடிப்படை சம்பவம் இது தான்.


இதை அனைவரும் நம்பவில்லை. குறிப்பாக உள்ளூர் வாசிகள். அவர்களுக்கு குற்றப்பிரிவின் மீது நம்பிக்கையில்லை. மேலும் இந்த கதை காவலாளிகளால், ஶ்ரீநகர் அரசியல்வாதிகளுக்கு தகுந்தார் போல் மிகுந்த சிரத்தையுடன் நெய்யப்பட்ட ஒரு கட்டுக்கதை என்று குறிப்பிடுகின்றனர். எனவே போராட்டக்காரர்கள் இந்த வழக்கில் சிபிஐ யின் விசாரணையை கோருகின்றனர். சஞ்சி ராமின் மூத்த மகள் மதுபாலா மார்ச் 31-ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ரஸானாவின் குடியிருப்புவாசிகளும் அவருடன் சேர்ந்து கொட்டாமொத் பகுதியின் ஒரு பெரும் அரச மரத்தின் கீழ் மிக உறுதியாக இந்த போராட்டத்தை நடத்துகின்றனர். அவர்கள் கோருவது மத்திய நிறுவனத்தின் மூலம் ஒரு நியாயமான விசாரணையை.
குற்றம் மற்றும் சதித்திட்டம்: குற்றப்பத்திரிக்கையின் படி, அதில் வெளிப்பட்டிருக்கும் நிகழ்வுகளின் தொடர்ச்சி இங்கே:
ஜம்முவின் கத்துவா மாவட்டத்தின், ஹிரநகர் பகுதியில் ரஸானாவின் அழகிய மலைப்பகுதி அமைந்துள்ளது. வனப்பகுதிகளாலும் வனங்களாலும் சூழப்பட்டிருக்கும் ஒரு குறுகிய நீளத்திற்குள் நுழையும் போது ஒரு இரும்பு தகடு அப்பகுதியின் பெயரை தாங்கி நம்மை வரவேற்கிறது.
மிகவும் மெத்தனமாக இருக்கும் இக்கிராமத்தில் இது போன்ற எழிச்சியான சில செயல்பாடுகள் தீடிரென முளைப்பதற்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். அப்பகுதிக்கு வரும் வருகையாளர்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காவல்ச்சாவடியில் கையெழுத்திட்டு உள்ளே நுழைய வேண்டியுள்ளது. அங்கு இருந்த உதவிகரமான காவலாளி ஒருவர், “பார்த்து செல்லுங்கள், கிராம மக்கள் டெல்லி பத்திரிக்கையாளர்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்” என்ற அறிவுரையுடன் உள்ளே அனுப்பினார்.
வெறும் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு சந்தினுள், வீணா தேவி என்கிற பெண்ணின் வீட்டை சென்றடைந்தோம். இவர் இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான சஞ்சியின் பக்கத்து வீட்டுக்காரர். இவர் தான் பாதிக்கப்பட்ட பெண்ணை கடைசியாக பார்த்த சாட்சியாக குற்றப்பத்திரிக்கையில் பதியப்பட்டுள்ளார். அவர் ஸ்வராஜ்யா ஆங்கில பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், அவர் இறுதியாக அந்த சிறுமியை பார்த்ததை குறித்து விளக்குகிறார். “ஆன்டி, நீங்கள் என்னுடைய குதிரையை பார்த்தீர்களா?” அதற்கு நான் “பார்க்கவில்லை” என்றேன். அதன் பிறகு அச்சிறுமி அவள் வீட்டிற்கு சென்றிருக்க வேண்டும். அப்போது கூட நான், இங்கே தனியாக என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கடிந்துக் கொண்டேன். பின்பு பக்கத்து வீடான சஞ்சி வீட்டின் மொட்ட மாடியை பார்த்தேன். அங்கே ஒருவர் கட்டிலில் போர்வையை போர்த்தி கொண்டு உறங்கி கொண்டிருந்தார். நான் தர்சனாவிடம்(சஞ்சியின் மனைவி) யார் இந்த வெயிலில் இப்படி உறங்கி கொண்டிருப்பது என கேட்டேன். அதற்கு அவர், என் அண்ணியின் மகன் என்றார். பின் நான் என் வேலையை பார்க்க சென்றுவிட்டேன்.
(வீணா தேவி)
குற்றபத்திரிக்கையின் அறிக்கை படி, அச்சிறுமி சஞ்சி ராமின் வீட்டுக்கு பின் புறம் குதிரை மேய்க்க அடிக்கடி வருவாள் என்றும், அப்படி வரும் போது அப்பெண்ணை கடத்த வேண்டும் என்றும், அங்கு உறங்கி கொண்டிருந்த பையனின்(ஓம்பிரகாஷ் மற்றும் த்ரிப்தா தேவியின் மகன்) முன்னதாகவே தாய் மாமன் சஞ்சி ராம் அறிவுறுத்தியிருந்தான். இந்த தாக்குதலுக்கு தயாராக இருந்த அந்த பையன், சம்பவ நாளுக்கு முன் தினமே தூக்க மருந்துகளை வாங்கி வைத்திருந்தான். அத்தோடு உடனடியாக தேவஸ்தானத்தின் சாவிகளையும் எடுத்து
கொண்டு அந்த பெண்ணிற்கு காட்டில் உதவி செய்வதாக போலியான வாக்குறுதியை கொடுத்து அழைத்து வந்துள்ளான். அங்கே அவனுடைய நண்பனும், சக குற்றவாளி மனுவும் இவனுடைய சைகைக்காக காத்து கொண்டிருந்துள்ளனர்.
வீணா தேவி, அந்த பையன் மாடியில் இருந்து இறங்கி வந்ததை பார்க்கவில்லை, ஆனாலும் அவன் இறங்கிவருவதற்கான வாய்ப்பிருப்பதை மறுக்கவும் இல்லை. “அவன் அச்சிறுமியை அழைத்து, கீழே இறங்கி வந்து சந்தித்தானா என்பது எனக்கு தெரியாது” என்று கூறிய வீணாதேவி, அச்சிறுமியை அவர் காண்பது அது தான் முதல் முறை என்றும் கூறினார். “அவள் தொடர்ந்து வருபவள் அல்ல. அவள் அப்படி வருபவளாக இருந்திருந்தால் எனக்கு தெரிந்திருக்கும். அச்சிறுமியை நான் பார்ப்பது அதுவே முதல் முறை” என்கிறார்.

(வீணா தேவியின் வீட்டிலிருந்து தெரியும் மொட்டை மாடி. வாஸ்பேசின் உடன் இருக்கும் பச்சை நிற வீடு புகைப்படத்தில் தெரிகிறது. அது தான் சஞ்சி ராமின் இல்லம். அந்த மாடியில் தெரியும் கட்டிலில் தான் குற்றம்
சாட்டப்பட்ட இளம் சிறுவன்  உறங்கியிருக்கிறான்)
மற்ற கிராம வாசிகளிடம், ஸ்வராஜ்யா பத்திரிக்கையாளர்கள் பேசிய போது, அவர்களும் இதற்கு முன் அச்சிறுமியை பார்த்ததில்லை என மறுத்தனர். அச்சிறுமியின் தந்தை “மொஹமத் யுசுப்” ஒரு பேட்டியில் கூறும் போது கூட பக்கர்வால் இனத்தவர்கள் குதிரை மேய்க்க ரஸானாவிற்கு செல்ல மாட்டர்கள். ஆனால் எப்படியோ துணிந்து அவள் அங்கே சென்றுவிட்டாள்” என்று கூறியிருக்கிறார்.
இது கேள்வியின் பிறப்பிடம், அந்த பெண் அப்பகுதியில் காணப்படுவது இதுவே முதல் முறை என்றால் எப்படி அவள் சஞ்சி ராமின் குறிப்பிட்ட இலக்காக இருக்க முடியும்? வீணா தேவியின் கணவர் மஹேந்திர ஷர்மா, மும்பையில் பணியாற்றுகிறார். அவர் மனைவி குறித்து அவர் தெரிவிக்கும் போது, அவர் மனைவி அவருடன் தொலைபேசியில் உரையாடுகையில் மூன்று முறை அச்சிறுமி குறித்து வீணா பேசியுள்ளார். ஒன்று ஜனவரி 10-ஆம் தேதி, அவர் மனைவி அச்சிறுமியை கண்ட போது. அடுத்து 11 ஜனவரி, அச்சிறுமியின் தாய் அவர் மகளை
தேடி வந்த போது மற்றொன்று 17 ஜனவரி அச்சிறுமியின் உடல் கிடைத்த போது”. அது மட்டுமின்றி “நம்முடைய குழந்தைகள் 10 நிமிடம் தாமதித்தாலே நம் மனத்தை நாம் முற்றிலுமாக தொலைத்துவிடும் சூழலில் இப்படி ஒரு நாள் கழித்து வந்து தேடுகிறீர்களே” என்று நான் அச்சிறுமியின் தாயை கண்டித்தேன் என வீணா தேவி
குறிப்பிட்டுள்ளார்.
வீணா தேவி நினைவு கூர்ந்து சொல்லும் போது, அச்சிறுமி மிக அழகாக இருந்ததாகவும். “ஜமுனி” என்கிற சல்வார் கமீஸ் வகையான ஆடையை அணிந்திருந்ததாகவும் தெரிவித்தார். அச்சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட போதும் அவர் அதே உடையில் தான் இருந்துள்ளார். இவ்வழக்கின் வழக்கறிஞர், அங்கூர் சர்மா இது குறித்து சர்ச்சையான ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார். அச்சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட போது, எந்த உடையில் இருந்தாரோ, அதே உடையணிந்த புகைப்படம் அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. இதை பார்க்கிற போது, யாரோ அலுவல் ரீதியாக அந்த புகைப்படத்தை அச்சிறுமி கொலை செய்யப்படுவதற்கு முன்பாகவே எடுத்திருப்பார்களா? அப்படியெனில் ஏன்? என்ற கேள்வி எழுகிறது.
ஆனாலும் கிராமப்புறவாசிகள் தெரிவிப்பது, பக்கர்வல் குழந்தைகளிடம் வெறும் ஒன்று அல்லது இரண்டு ஆடைகள் இருப்பது ஒன்றும் ஆச்சரியமான ஒன்றல்ல என்கின்றனர். ஆனாலும் அவர்கள், அப்பெண்ணின் தாய்,
அக்குழந்தையின் பள்ளி சீருடையுடன், புத்தக பையுடன் இருப்பது போல் வைரலாகியுள்ள புகைப்படம் குறித்து கேள்வி எழுப்புகின்றனர். காரணம், “எங்களுக்கு தெரிந்து அந்த பெண் எந்த பள்ளிக்கும் சென்றதில்லை.
அப்படியெனில் அந்த பள்ளி சீருடை எங்கிருந்து வந்தது?” அச்சிறுமியின் தந்தை யூசுப் அவருடைய இரண்டு மகன்களை பள்ளிக்கு அனுப்பினாரே தவிர, தத்து பிள்ளையான இச்சிறுமியை பள்ளிக்கு அனுப்பவில்லை. அவள் குதிரைகளை மேய்த்து கொண்டு தான் இருந்தாள்” என்கின்றனர் உள்ளூர்வாசிகள்.
குற்றப்பத்திரிக்கை அறிக்கையில், சஞ்சி ராமின் உறவினர் மகன், அச்சிறுமி அவள் குதிரையை குறித்து வீணா தேவியிடம் கேட்டதை ஒட்டுக் கேட்டிருக்கிறான். அதன் பின் கீழே இறங்கி சென்று அச்சிறுமிக்கு உதவியிருக்கிறான். கொஞ்ச நேரத்திற்கு பின் பொது மக்கள் பார்வைப்படாத இடத்தில், அவனுடைய நண்பன் மனு அச்சிறுமியை பிடித்து கொள்ள, அவள் மீது வன்முறையாக மயக்க மருந்துகளை பூசியிருக்கிறான். பின் அச்சிறுவன் அச்சிறுமியை பலாத்காரம் செய்திருக்கிறான்; மனு முயற்சித்துள்ளான் ஆனால் முடியவில்லை. பின்பு
இருவரும் அவளை தேவஸ்தானத்திற்க்கு அழைத்து சென்று அங்கேயே இரண்டு நாட்கள் வைத்திருந்துள்ளனர்.

(சஞ்சி ராம் வீட்டிலிருந்து தேவஸ்தானத்திற்கு (ரோஸ் வண்ணத்தில் இருப்பது) செல்லும் மண் பாதை. இந்த முழுமையான பாதையின் முடிவில் இடது புறம் திரும்பும் இடத்தில் தான் ஜகதீஸ் ராஜ் என்பவரால் ஆச்சிறுமியின்
உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. )
இந்த தேவஸ்தானத்திலிருந்து இரண்டு நிமிட நடையில் சஞ்சி ராமின் இல்லத்தை அடைந்துவிடலாம். அவர் வீட்டு முற்றத்திலிருக்கும் கதவை திறந்தால் அது பிரதான சாலைக்கு வழிவகுக்கும். அவர் இல்லத்தில்
ஓரத்திலிருக்கும் கதவை திறந்தால் இந்த மண் சாலை தெரியும் இதுவே தேவஸ்தானத்திற்க்கு அவர் வீட்டிலிருந்து செல்லும் பாதை. இது அடிப்படையில் வனத்திற்கு நடுவே அமைந்திருக்கும் ஒரு அறை. இங்கிருந்து பார்த்தால் தெரிகின்ற ஒரே வீடு சஞ்சி ராமினுடையது. ரோஸ் நிற சுவருகள், மூன்று கதவு,
சிமெண்ட் தரை, பம்ப், பெரிய டின் ஷெட்டால் போர்த்தப்பட்ட கட்டிடம். இந்த தேவஸ்தானம் நாங்கள் சென்ற போது மூடியிருந்தது. எங்களுடன் வந்துக் கொண்டிருந்த சில உள்ளூர் வாசிகள் சாவிகளுக்கு ஏற்பாடு செய்தனர். உள்ளே ஒரு புறத்தில் சில சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. அதனோடு குல தெய்வத்தின் புகைப்படமும் இருந்தது (காளிவீர் என்பது பெயர், ஒரு மனிதர் குதிரையின் மீது உட்கார்ந்திருப்பதை போன்ற புகைப்படம்) மற்றொரு புறத்தில் இரண்டு டிரம்முகள் இருந்தன. அதில் மளிகை பொருள் சர்க்கரை, அரிசி போன்றவை நிரப்பி வைக்கப்பட்டிருந்தன. அங்கே ஒரு மேஜையும் அதன் மேல் சில பாத்திரங்களும், மிக சுத்தமாக போர்த்தப்பட்ட பாயும் இருந்தது. 4 X 3 என்ற அளவிலான மேஜையின் கீழ் தான் ப்ளாஸ்டிக் மற்றும் பஞ்சு பாயினால் சுற்றப்பட்டு அச்சிறுமி வைக்கப்பட்டிருந்தாள் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதை பார்க்கிற பொழுது ஒரு சிறுமியை மற்றவர் கண்ணில் படாமல் மறைத்து வைக்கின்ற அளவிற்கான மேஜையாக அது இல்லை. மிக சிறிதாக இருந்தது.
சஞ்சி ராம் இந்த தேவஸ்தானத்தின் மூன்று சாவிகளை வைத்துள்ளார். மற்ற இரண்டு சாவிகளும் சம்பவம் நடந்த இக்கிராமத்திற்கு அருகே இருக்கும் பாட்டா மற்றும் கூட்டாக் என்ற மற்ற இரண்டு கிராமத்தில் இருந்துள்ளது. அவர்களும் இவர்களின் வம்சவாளியை சார்ந்த குடும்ப உறுப்பினர்களே.
மற்ற கிராமத்தார்களுக்கு தெரியாமல் அச்சிறுமியை இந்த அறையில் இரண்டு நாட்கள் வைத்திருப்பது சாத்தியமா? இது ரஸானா கிராமத்து மக்களும் மற்ற இரண்டு கிராமத்து மக்களும் வந்து செல்ல முடியாத வண்ணம் அத்தனை ஒதுக்கு புறமாக இருந்துள்ளது? அல்லது மொத்த கிராமமும் இந்த சதி திட்டத்தில்
பங்கு உள்ளதா?
நாங்கள் அந்த தேவஸ்தானத்தில் மதிய நேரத்தில் ஒரு மணி நேரத்தை செலவு செய்தோம். அச்சமயத்தில் அங்கே எங்களை தவிர யாரும் வரவில்லை. ஆனாலும் கிராமத்துவாசிகள், “அனைவரும் அதிகாலை பொழுதில் ஒரு நாளின் துவக்கத்தில் இங்கு வருவது தான் வழக்கம்” என்று சொன்னார்கள். அப்போது சிலைகளின்
பக்கத்தில் விளக்குகள் முன்னமே எரிந்து கொண்டிருந்தன.
குற்றப்பத்திரிக்கையின் அறிக்கை படி ஜனவரி 13, பின் மாலை பொழுது, லொஹரி பண்டிகை நாளில், சஞ்சி ராம் அவனுடைய உறவினர் சிறுவன், மற்றும் அவர் மகன் விஷால் ஜங்கோத்ரா பின் மனுவிடம் இது தான் அப்பெண்ணை கொல்ல சரியான தருணம் என கூறியதாகவும்; பின்பு அப்பெண்ணின் உடலை அருகிலுள்ள பாலத்திற்க்கு விரைந்து எடுத்து சென்றதாகவும் அப்போது அவர்களுடம் 28 வயதான காவல் அதிகாரி தீபக் குஜூரியாவும் இந்த குற்றத்தில் இணைந்து கொண்டு, அப்பெண் கொல்லப்படுவதற்கு முன் அவளை பலாத்காரம் செய்ய விரும்பவதாக தெரிவித்ததாகவும் அறிக்கை சொல்கிறது. அந்த காவலதிகாரி அப்பெண்ணை அழுத்தி
கொலை செய்ய முயற்சித்து தோல்வி அடைந்ததாகவும் பின் அந்த வேலையை சஞ்சி ராமின் உறவினர் மகன் “அச்சிறுமியின் முதுகில் கால் மூட்டை அழுத்தி கொன்றதாகவும்”, மேலும் அவள் தலையில் இரண்டு முறை கல்லால் தாக்கி கொலை செய்ததாகவும் சொல்லப்படுகிறது. (28 வயதான, முறையாக பயிற்சி பெற்ற
காவலதிகாரி செய்ய முடியாத ஒரு வேலையை, அவர் வயதில் பாதியிருக்கும் அச்சிறுவன் செய்திருப்பது நம்ப கடினமாக உள்ளது).
இந்த கோரமான செயலுக்கு பின் அச்சிறுமியின் உடல் அங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹிரா நகரில் கால்வாயில் வீசுவதற்கு தேவையான வாகனத்தை ஏற்பாடு செய்ய முடியாததால், அச்சிறுமியின் உடல் தேவஸ்தானத்தில் வைக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜனவரி 15 அன்று சஞ்சி ராம்
அவன் சகாக்களிடம் வாகனத்தை அன்றளவும் ஏற்பாடு செய்யமுடியாததால் அச்சிறுமியின் உடல் அருகிலுள்ள காட்டில் புதைக்கப்பட வேண்டும். ஏனெனில் அடுத்த நாள் சஞ்சி ராம் “ஃபான்டா” என்ற சடங்கை கோவிலில் நிகழ்த்த வேண்டியிருப்பதாக தெரிவித்துள்ளான். ஃபான்டா என்றால் வந்திருக்கும் மனிதருக்கு பூசாரி திருஷ்டி கழிப்பதை போன்ற ஒரு சடங்கு. இந்த சடங்கை தொடர்ந்து “பாந்த்ரா” நடைபெறுவது வழக்கம். பாந்த்ரா என்றால் அன்னதானம்.
குற்றப்பத்திரிக்கை அறிக்கையின் படி, சஞ்சி ராம் காவலாளிகளை தன் கைவசம் வைத்திருந்தார் என்றும். உள்ளூர் காவல் நிலையத்தின் அதிகாரியாக இருந்த தீபக் கஜூரியாவிற்க்கும் அச்சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்டதில் ஒரு பங்கு உள்ளது என குற்றம் சாட்டப்படுகிறது. மற்ற காவலாளிகளான திலக் ராஜ்
மற்றும் ஆனந்த் தத்தாவுக்கு 4 இலட்சம் இலஞ்சம் வழங்கப்பட்டு அவர்கள் சரி செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்பத்திரிக்கையின் அறிக்கை படி, த்ரிப்பதா தேவி(சஞ்சி ராம் சகோதரி) சஞ்சி ராமின் இல்லத்திற்க்கு ஜனவரி 12 அன்று வந்துள்ளார். அங்கே சஞ்சி தன் சகோதரியிடம் அவர் மகன் உடந்தையாக இருந்து சிறுமியை கடத்தியது பதுக்கியது என அவன் புரிந்த அனைத்து குற்றங்களையும் கூறியுள்ளார். குற்றப்பத்திரிக்கையின் படி, காவலாளி திலக் ராஜ்ஜை சிறு வயதிலிருந்தே த்ரிப்தா தேவிக்கு தெரியும் என்பதால் 1.5 இலட்சம் ரூபாயை த்ரிப்தா தேவியிடம் சஞ்சி ராம் கொடுத்து, திலக் ராஜ்ஜிடம் கொடுத்து விடுமாறு கூறியுள்ளார். ஸ்வராஜ்யா குழுமத்தினர் அவரை சந்திக்க சென்ற போது, த்ரிப்தா தேவி அவர் மீது சுமத்தப்படும் குற்றம் அனைத்தையும் மறுத்தார். “அவர்கள் குற்ற அறிக்கையில் சொல்வது போல் நான் என் சகோதரன் வீட்டுக்கு செல்வும் இல்லை. திலக் ராஜ்ஜிற்கு பணம் கொடுக்கவும் இல்லை. என் மகன் அவனுடைய மோசமான நடவடிக்கையால் அவன் பயிலும் பள்ளியிலிருந்து கண்டிக்கப்பட்டிருந்தான். அவனுக்கும் அங்கு பயிலும் மற்றொரு மாணவனுக்கும் பிரச்சனை. ஆனால் அவன் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதால் பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்டான் என்று தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நான் அவனை என் சகோதரன் வீட்டுக்கு, அவனுடைய பொது தேர்வை சரியாக படித்து எழுதி தேர்வு பெற வேண்டும் என்பதற்காக அனுப்பினேன். அவன் அங்கே டியூசன் சென்று கொண்டிருந்தான். ஒரு தாயாக நான் எப்படி என் மகன் இப்படி ஒரு சதிச்செயலை செய்ய அனுமதிப்பேன்?
இது ஒரு தொலைக்காட்சியின் திரைக்கதை போல் உள்ளது. இது உண்மையில்லை” என்றார். அந்த சிறுவனுக்கு ஒரு மூத்த சகோதரியும் சகோதரனும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கிராமவாசிகளும் எழுப்பும் கேள்விகள்:
குற்ற அறிக்கையின் படி, சிறுமியின் உடல் காடுகளுக்கிடையே திணித்து வீசப்பட்டு ஜனவரி 17 அன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது கிராமவாசிகளிடையே பல கேள்விகளை எழுப்புகிறது.
முதலில், சிறுமியின் உடல் மூன்று நாட்களுக்கு பின் கண்டெடுக்கப்பட்ட போதும் எப்படி அதிலிருந்து எந்த துர்நாற்றமும் வரவில்லை? (ஜனவரி 13 இரவு துவங்கி, 14, 15, மற்றும் 16).
இரண்டாவது, ஏன் ஒருவரின் பார்வையில் கூட சிறுமியின் உடல் படவில்லை. குறிப்பாக 16 ஜனவரி அன்று தேவஸ்தானத்தில் பெரும் கூட்டம் கூடி ஒரு வைபத்தை நிகழ்த்திய போது?
மூன்றாவது, ஏன் ஜனவரி மாத கடும் குளிரிலும் அவ்வுடல் விரைத்துபோகவில்லை? பக்கர்வல் இன மக்களால் நடத்தப்பட்ட போரட்டத்தின் போது வைக்கப்பட்டிருந்த உடல் மிகவும் தளர்வானதாக இருந்துள்ளது.
நான்காவது, ஒழுக்கமற்ற தன் மகனை சகோதரனின் கட்டுக்கோப்பான வழிகாட்டுதலின் மூலம் நன்றாக படிப்பான் என நம்பி அனுப்பிய தன் சகோதரி மகனை எதற்காக சஞ்சி ராம் வரிசையான குற்றங்களில் மாட்டி விட வேண்டும். தன்னுடைய சகோதரன் மனத்தில் இப்படியொரு எண்ணம் இருப்பது தெரிந்திருந்தால் அந்த தாய் மகனை அனுப்பியிருப்பார்களா?
ஐந்தாவது, ஏன் சதித்திட்டத்தின் மூலக்காரணமானவர்கள் சிறுமியின் உடலை வெறுமனே வெளியில் வீசி செல்ல வேண்டும்? குறிப்பாக ஃபான்டா (திருஷ்டி கழித்தல் வைபவம்) நடைபெற்ற நாளிலும் அதை தொடர்ந்து கூட்டமான மக்கள் வந்து உண்டு கழித்த பாந்த்ரா(அன்னதானம்) நாளிலும்? இதற்கு அவர்கள் பூமியை
தோண்டி புதைத்திருக்கலாமே? குற்ற அறிக்கையின் படி அவர்கள் ஆதாரங்களை அழிக்க அச்சிறுமியின் உடைகளை துவைத்துள்ளனர். “இதனால் துவைத்த துணியை பரிசோதிப்பதன் மூலம் FSL ஶ்ரீநகரால் எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை.” ஆனால் ஏன் குற்றவாளிகள் துணிகளை துவைப்பதோடு மட்டும் நிறுத்திவிட்டனர்? உடலை மறைப்பதற்கு எந்த விதமான முயற்சிகளும் எடுக்கவில்லை?
ஆறாவது, 13 ஜனவரி லொஹரி நாள். ஏராளமான மக்கள் தேவஸ்தானத்திற்கு வந்திருப்பார்கள். ஏன் ஒருவர் கூட அச்சிறுமியை பார்க்கவில்லை? “அது லொஹரி நாள். அன்று அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. நாங்கள் மேஜை மேல் இருந்து “தாரிக்களை” எடுத்து தரையில் வைத்து விட்டு பின் கீழே அமர்ந்து பக்தி பாடல்கள் பாட துவங்கினோம். எனவே அச்சிறுமி மேஜைக்கடியில் வைக்கப்பட்டிருப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.” என பிஷான் தாஸ் என்ற 76 வயது முதியவர், ரஸானா கிராமத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி தெரிவித்தார்.
(பிஷான் தாஸ்)
ஏழாவது, எப்படி சஞ்சி ராமின் மகன் விஷால் ஜங்கோத்ரா மீருட்டிலும் கத்துவாவிலும் ஒரே நேரத்தில் இருக்க முடியும்? குற்றப்பிரிவின் விசாரணையின் படி விஷால் ரஸானாவில் இருந்துள்ளான். ஆனால் அவன் பயிலும் கல்லூரி பதிவேட்டின் படி அவன் மீருட்டில் அதே நாளில் தேர்வு எழுதிக் கொண்டிருந்துள்ளான். அவனுடைய மூத்த சகோதரி மோனிகா, விஷாலின் இன்ஸ்டாகிராம் பதிவுகளை நம்மிடம் காட்டி அதில் “லோகேஷன்” என்ற இடத்தில் முசாபர் நகர் வருவதை சுட்டிக்காட்டினார். ஆனால் இன்ஸ்டாகிராமில் லோகேஷனை மாற்றுவது என்பது மிக சுலபமான ஒரு விஷயம். எப்படியாயினும் விஷால் அந்நேரத்தில் ரஷானாவில் தான் இருந்தானா என்பதில் விசாரணை குழுவிற்கும் குழப்பம் உண்டு. காவல்த்துறையினர் கல்லூரி வளாகத்தின் சிசிடிவி தொகுப்புகளை பறிமுதல் செய்திருப்பதாக கூறுகின்றனர். ஆனால் இது நாள் வரை எந்த பதிவுகளையும் அவர்கள் வெளியிடவில்லை. “முதலில் அவர்கள் சஞ்சி ராமின் மூத்த மகனை தான் சிக்கலில் மாட்டி விட கட்டம் கட்டினார்கள். ஆனால் அவன் கப்பல் படையில் இருப்பதால் அது சாத்தியமில்லை என்பதால் பின்பு அவர்கள் விஷாலை பின் தொடர ஆரம்பித்திருக்கிறார்கள்” என்று ஜங்கோத்ரா குடும்ப உறுப்பினர் தெரிவித்தார்.
எட்டாவது, “குற்ற அறிக்கையின் படி சஞ்சி ராமின் உறவினர் சிறுவன், அச்சிறுமியை இரண்டு முறை கல்லால் தாக்கி “அவள் முதுகில் அவன் கால் மூட்டை அழுத்தி அவளின் இரண்டு முனைகளிலும் அழுத்தம் கொடுத்து கொலை செய்தான்” என்று கூறப்பட்டுள்ளது. ஆனாலும் மருத்துவ அறிக்கை படி பாதிக்கப்பட்ட அப்பெண் உணவு கொடுக்கப்படாமல், மயக்க மருந்துகளால் பாதிக்கப்பட்டு மூச்சு திணறி, இதய செயல்பாடு நின்றதால் உயிரழந்தாள்” என்று கூறப்படுகிறது. எது உண்மை?
ஒன்பதாவது, குற்ற அறிக்கையின் படி விசாரணை குழு அச்சிறுமியின் தலைமுடி ஒன்றை தேவஸ்தானிலிருந்து எடுத்துள்ளது. அவள் அந்த அறையிலேயே சில நாட்கள் வைக்கப்பட்டிருந்தால் அவர்கள் எப்படி வெறும் தலைமுடியை மட்டும் கண்டெடுக்க முடியும்?
பத்தாவது. இந்த இழிவான கதையின்  மூளையாக இருந்து செயல்பட்டு ஒரு பெரும் சதித்திட்டத்தின் மூளையாக இருந்தவன் எப்படி இப்படி முட்டாள்தனமாக கடைசி தருணத்தில் செயல்பட முடியும்? இந்த குற்றத்திலிருந்து தப்பிக்க காவல்த்துறைக்கு இலஞ்சமாக பல இலட்சத்தை அவனால் தர முடிந்திருக்கும் போது ஏன் அச்சிறுமியின் உடலை மறைக்க ஒரு வாகனத்தை அவனால் ஏற்பாடு செய்ய முடியவில்லை? அத்தனை பெரிய காட்டை விட்டுவிட்டு , அவன் வீட்டிலிருந்து கல்லெரிந்தால் வந்து விழுகிற தூரத்தில் இருக்கும் அருகாமையில் ஏன் அச்சிறுமியின் உடலை வீச வேண்டும்? இது தான் சந்தேகத்தை நீர்த்து போக செய்கிறது? “அச்சிறுமி கொல்லப்பட்டு ரஸானாவில் வீசப்பட்டதாக” சொல்லப்படும் இக்குற்றத்தின் பின் ஏதோவொரு சதித்திட்டம் வெளியிலிருந்து அரங்கேற்றப்பட்டுள்ளது என்று கிராமவாசிகள் நம்புவதன் சுருக்கம் இது.
மர்மம் 1: மர்மமான மோட்டார் சைக்கிள்
கிராமவாசிகளை பொருத்தவரை இந்த மோட்டார் சைக்கிள் சம்பவத்தை குற்றப்பிரிவின் அனைத்து அதிகாரிகள் தொடங்கி பல டெல்லி பத்திரிக்கையாளர்களிடமும் பகிர்ந்து கொண்டுள்ளனர். ஆனால் இந்த தகவலை யாரோ வேண்டுமென்றே தவிர்க்கிறார்கள். பிஷான் தாஸ் நம்மிடம் இந்த மோட்டார் சைக்கிள் குறித்து
தெரிவித்தது: “ஜனவரி 16 இரவு கிராமத்தின் டிரான்ஸ்பார்மர் இரவு 10 மணியளவில் வெடித்தது. அச்சமயம் வானிலையும் சாதகமாக இருந்திருக்கவில்லை. இது ஏன் நடந்தது என்பது இன்றளவும் மர்மமாகவே உள்ளது. எங்களுடைய சில உபகரணங்கள் அச்சமயத்தில் சேதப்படுத்தப்பட்டிருந்தன. பின் அதிகாலை 3 மணியளவில் நான் தூக்கத்திலிருந்து எழுந்தேன் அப்போது ஒரு மோட்டார் சைக்கிளை கண்டேன் – அது புல்லட் ரக வண்டியென நினைக்கிறேன் – அது கிராமத்திற்குள் நுழைந்தது. அதை ஓட்டி வந்த மனிதன் உடலை சுற்றி
கம்பளியை போர்த்தியிருந்தான். அச்சமயம் மிக குளிராகவும் இருந்தது. அதன்பின், என்னால் உறங்க முடியவில்லை. 25 – 30 நிமிடங்களுக்கு பின் அவன் மோட்டர் சைக்கிளுடன் கிராமத்தை விட்டு வெளியேறினான்” என்றார் தாஸ்.
இவருடைய வீடு தான் கிராமத்தின் நுழைவில் அமைந்துள்ளது. இது மிகவும் அசாதராணமான ஒரு செயல். கிராமவாசிகளின் கூற்றுப்படி, அக்கிராமத்தில் இருக்க கூடிய சில பெண்கள் இரவுகளில் பெரும்பாலும் உறங்க
மாட்டார்கள். அவர்களும் அந்த மோட்டார் சைக்கிளின் சத்தத்தை கேட்டுள்ளனர். போராட்ட களத்தில் இருந்த ஒரு வயதான பெண்மணியும் அந்த வண்டியை பார்த்ததாக தெரிவித்துள்ளார். “அந்த வண்டி சஞ்சி ராமின் வீட்டு முன்பு சில நிமிடம் நின்றுள்ளது பின்பு அங்கிருந்து சென்றுவிட்டது” என்கிறார். சஞ்சி ராமின் வீட்டின் மிக அருகாமையில் இருக்கும் தர்மபால் ஷர்மாவை ஸ்வாரஜ்யா குழு விசாரித்த போது “அச்சமயம் நான் ஜம்முவிலிருந்து வெளியே இருந்தேன். ஆனால் ட்ராஸ்பார்மர் வெடித்த சம்பவம் குறித்து அறிந்தேன். அதனால் தான் என் வீட்டு குளிர்சாதன பெட்டி சேதமடைந்திருந்தது.” என்றார்.
கிராமவாசிகள் அந்த மோட்டர் வண்டியில் வந்தவன் தான் அச்சிறுமியின் உடலை அந்த இடத்தில் வீசியிருக்க வேண்டும் என்று சந்தேகிக்கின்றனர்.
மர்மம் 2 – சஞ்சி ராம் தான் குற்றம் சாட்டப்பட்டவர் என்று வெளியுலகம் அறிவதற்கு முன்பே ஜனவரி 17-இல் எப்படி அவர் பெயர் முன்னெடுக்கப்பட்டது? இதில் அவர் தான் சம்மந்தப்பட்டுள்ளார் என்று எப்படி அவர்களுக்கு
தெரிந்தது?
அச்சிறுமியின் உடல் கத்துவா மாவட்டத்தின் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக 17 ஜனவரி மதியம் கொண்டு செல்லப்பட்டது. கிராமவாசிகளின் கருத்து படி, “போராட்டகாரர்களின் வழக்கறிஞர் தலிப் ஹுசைனும்
அங்கிருந்தார். அவருடைய வீடு காஷ்மீரில் பூன்ச் என்கிற இடத்தில் உள்ளது. இத்தனை விரைவாக சில மணி நேரங்களிலெல்லாம் அவரால் எப்படி அங்கு வர முடிந்தது? என கேள்வியெழுப்பினர்.
“அவர் இதற்கு முன் அங்கிருக்கவில்லை. ஆனால் அச்சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு மதியம் 12 மணிக்கு கொண்டு செல்லப்படும் போதே அவர் பக்கர்வால் இன மக்களுடன் இருந்தார். அப்படியெனில் அவர் முன்பிருந்தே கத்துவாவில் தான் இருந்தாரா? இருந்தார் எனில் எதற்காக? என்று குற்றத்தில் தொடர்புடையவராக சொல்லப்படும் மனுவின் உறவினர் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
ராஸானா மக்கள் கூறும் பொழுது “ஹுசைன் மற்றும் இரண்டு பக்கவர்வால் சகோதரர்கள் அந்த போராட்டத்தில் இருந்தனர். அந்த இரு சகோதரர்களில் ஒருவர் முகமத் ஜானின் மகன். இவர் தான் ஜனவரி 17 அன்று நடந்த போராட்டத்தில் சஞ்சு ராமின் பெயரை முதலில் சொன்னவர். யார் அச்சிறுமியை கொன்றார்கள் என்பதற்கு
எந்த துப்பும் இல்லாத போது எப்படி இவர்களால் சஞ்சி ராமின் பெயரை சொல்ல முடிந்தது? இதற்கு முன் நாங்கள் ஹுசைனை பார்த்ததில்லை. அவரும் எங்களை இதற்கு முன் பார்த்ததில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
நாம் அங்கிருந்த பல குடியிருப்பு வாசிகளிடம் பேசியபோது, அனைவரும் சஞ்சி ராமின் பெயர் 17 ஜனவரி அன்றே சொல்லப்பட்டு விட்டதை உறுதிப்படுத்தினர். ஜனவரி 17 மதியம் பக்கர்வால் இன மக்கள், கூட்டாஹ் முத் சந்திப்பில் அச்சிறுமியின் உடலை ஒரு படுக்கை விரிப்பில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு ஒரு ஐம்பது நபர்கள் இருந்தார்கள். பெரும்பாலும் பக்கர்வால் இன மக்கள் சிலர் காஷ்மீர் இஸ்லாமியர்கள். நான் தலீப் ஹுசைனை அங்கு கண்டேன், அவர் சஞ்சு வின் பெயரையும் அவர் மகனையும் குறிப்பிட்டு முழங்கிக் கொண்டிருந்தார் என பெயர் சொல்ல விரும்பாத கூத்தாஹ் குடியிருப்புவாசி ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர், “எனக்கு யூசுப்பை பல நாட்களாக தெரியும். அவருக்கு என் வருத்தத்தை தெரிவிக்க நான் சென்றிருந்தேன். ஆனால் அவருக்கு ஒரு மகள் இருப்பது குறித்து அறிந்து கொள்வது இதுவே முதல் முறை. அவரின் இரு மகன்கள் பள்ளிக்கு செல்வதை மட்டுமே நான் கண்டிருக்கிறேன்” என்றார். எப்படி ஹூசைனால் குற்றம் சாட்டப்பட்டவரின் பெயரை, அதிகாரப்பூர்வ விசாரணை துவங்கும் முன்பே சொல்ல முடியும்?
கண்ணால் கண்ட சாட்சியாக கூத்தாஹ் இல் வசிக்கும் நபர் கூறியது “ஜனவரி 21, சவுத்தா (இறந்த நான்காம் நாளை பக்கர்வால் இனத்தவர் இப்படி குறிப்பிடுகின்றனர்) நாள் அன்று பெரும் கூட்டம் ஒன்று கூடியிருந்தது. இந்த முறை அதிகப்படியான கூட்டத்தை காண முடிந்தது. “இதில் பெரும்பாலான காஷ்மீரிய இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். இந்த முறை சஞ்சு, அவர் மகன் விஷால் கான்ஸ்டபிள் தீபக்கின் பெயர் ஒலிப்பெருக்கியில் அறிவிக்கப்பட்டது” என்றார்.
இதன் உள்நோக்கம்
இந்த குற்றத்தின் உள்நோக்கம் மத்திய அரசை தண்டனைக்குள்ளாக்குவதல்ல. அது முக்கியமும் அல்ல. குற்ற அறிக்கை, தெளிவாக கூறியுள்ளது, சஞ்சி ராம் இந்த சதித்திட்டத்தை தீட்டுவதற்கும், அச்சிறுமியை கடத்தி கொலை செய்வதற்கும் பின்னனியாக இருந்தது பக்கர்வால் இன மக்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்றுவது. மேலும், குற்ற அறிக்கையின் படி, பக்கர்வால் இன மக்கள் சஞ்சி ராமை இதற்கு முன் அடித்ததாகவும் அதற்கான பழிவாங்கும் நடவடிக்கை தான் இது என்கிறது. எப்படியோ ஒரு பெரும்பான்மை சமூகத்தை சார்ந்த ஒருவரை,
குறிப்பாக அவர்களின் வாழ்வாதாரத்திற்காக, மேய்ச்சலுக்காக நம்பியிருக்கும் ஒரு சமூகத்தின் ஆளை அடிக்கும் அளவிற்கான துணிச்சல் அவர்களுக்கு இருக்குமா என்பது கேள்வியாக உள்ளது.
குற்ற அறிக்கையின் படி, சஞ்சு ராம் கூட்டாஹ் பகுதியை சேர்ந்த ஹர்னம் சிங்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்ததாக சொல்லப்படுகிறது. காரணம் அவர் நிலத்தை பக்கவர்வால் இன மக்களுக்கு விற்றது. ஆனால் சிங்கோ இந்த குற்றச்சாட்டை கடுமையாக மறுத்துள்ளார். அவர் ஸ்வராஜ்யா குழுவிடம் பேசிய போது, “சஞ்சி ராம் அது போன்ற எந்த பிரச்சாரத்தையும் எனக்கு எதிராக செய்யவில்லை. எங்களுக்கு இடையே எந்த பிரச்சனையும் இல்லை. அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு நபர் பல்பீர் சிங், இவர் அச்சிறுமியின் தந்தை
யூசுப்பிற்க்கு 2007-இல் ஒரு நிலத்தை விற்றுள்ளார். அவர் மீதும் எந்த ஒரு எதிர்ப்பு பிராச்சாரத்தையும் சஞ்சி ராம் செய்ததில்லை என்றார்.
ரஸானா குடியிருப்புவாசிகள் எங்களிடம் தெரிவித்தது, ஜனவரி 17 அன்று நூற்றுக்கணக்கான பக்கவர்கால்கள் பல காஷ்மீர் இஸ்லாமியர்களுடம் சேர்ந்து அவர்களின் வாகனத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அன்று மாலையே ஒவ்வொரு வீட்டை கடந்து செல்லும் போதும் அவ்வீட்டின் கதவை லத்தியால் தட்டி ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். இது அவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஊட்டியுள்ளது. அந்த அணிவகுப்பு முடிந்த பின் கோபத்துடன் இருந்த பக்கர்வால்கள் அச்சிறுமியின் உடலை கூத்தாஹ் கிராமத்தின் சந்திப்பில் வைத்து “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்ற கோஷத்துடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கூத்தாஹ் குடியிருப்புவாசி, அந்த போராட்டத்தை நேரில் கண்டவர் சொன்ன போது, “சிலர் சுவர்களில் “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என எழுதியிருந்தினர். இது மிகவும் மோசமான செயல். ஆனால் நான் அதை காதாற கேட்கவில்லை” என்றார். அந்த குடியிருப்புவாசிகள் அனைவரும் யூசுப்பையும், பக்கவர்வால் இன மக்களையும் பெரிதும் புகழத்தான் செய்கிறார்கள். அவர்கள் அங்கிருந்தவரை மிக அமைதியான மக்களாக இருந்துள்ளனர். அவர்கள் யாரையும் தொந்தரவு செய்யவில்லை. வனங்களில் வாழ்ந்து கொண்டு, மலைகள் மீது இருந்து கொண்டு, கிராமத்தின் புறப்பகுதியில் இருந்து கொண்டு யாருக்கும் எந்த தொல்லைகளையும் அவர்கள் கொடுத்ததில்லை. அவர்களுக்கும் கிராம மக்களுக்கும் ஆன உறவு சுமூகமானதாகவே இருந்திருக்கிறது. எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை” என்றனர்.
ரஸானா கிராம மக்கள் கூறும் போது, குற்றப்பிரிவு அதிகாரிகளில், ஜனவரி மாதத்தில் தோராயமாக சில நபர்களை கிராமத்தில் இருந்து விசாரணைக்கு அழைத்தப் போது பல அரசியல் கட்சிகள் மற்றும் போராட்டகாரர்கள் அவர்கள் உடன் வந்தனர். அவர்கள் ஒரு கூட்டமாக வந்த மனிதர்கள் மட்டுமே அவர்கள் ஒரு
பதிவு செய்யப்பட்ட அமைப்பை சார்ந்தவர்கள் அல்ல என்று அங்கூர் சர்மா என்பவர் தெரிவித்தார்.
“இந்த பிரச்சனை நடுவில் நாம் “பாரத் மாதா கி ஜெய்” என சொல்லக்கூடாது..? நம்மை நாமே ஏன் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டபட்டவர்களை பாதுகாப்பவர்களா கூறி அவமானப்படுத்தி கொள்ள வேண்டும்? இந்த சம்பவம் நிகழ்ந்த நாள் துவங்கி எது நடந்ததோ அது ஒரு மோசமான நிகழ்வு என சொல்லியே வந்துள்ளோம். அச்சிறுமிக்கு நியாயம் கிடைத்தாக வேண்டும் என்பதில் நாங்களும் உறுதியாக உள்ளோம். ஆனால் ஏன் அப்பாவித்தனமான சில கதைகளை புனையவேண்டும்? இதற்கான சிபிஐ விசாரணையை கோரியுள்ளோம். நாம் ஏன் பலாத்கார குற்றவாளிகளை பாதுக்கபவர்கள் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படவேண்டும்” என்று கேட்டார் மது.
கிராமவாசிகள் அனைவரும் அவர்கள் தவறாக அடையாளப் படுத்தப்பட்டது குறித்து கடும் கோபத்தில் உள்ளனர். ஜம்முவில் டோக்ரா இனத்தவர்கள் அவர்களின் மொத்த இனமும் நியாயமான விசாரணையை கோரியதை தவறாக அடையாளப்படுத்தி அவமானப்படுத்தப் பட்டதால் கடும் வருத்தத்தில் உள்ளனர். “இது டோக்ரா இனத்தவர்களோடு மட்டும் முடிந்து விடவில்லை, இவர்களின் எல்லை இப்போது டோக்ரா என்பதை கடந்து மொத்த ஹிந்து சமூகத்தையே எதிர்ப்பதாக மாறியுள்ளது. வாட்ஸாப், முகநூல் என சமூக ஊடகங்களில், சிவனின் திரிசூலத்துடன் இறந்த பெண்ணின் உடல் இருப்பது போன்ற கண்டன குரல்கள் எழுவதை நம்மால்
பார்க்கமுடிகிறது. சிறுமிக்கான நியாயம் கோரல் என்ற நிலையிலிருந்து தாழ்ந்து, அவர்களின் கவனம் இப்போது  ஒட்டு மொத்த ஹிந்து சமூகத்தையும் தாக்கி அவமானப்படுத்துவதாக மாற்றியுள்ளது. நம்முடைய சமூகத்தின் கடவுள்களும் நம் கலாச்சார குறியீடுகளும் பலாத்காரத்தின் அடையாளங்களா?” என கொந்தளித்தார்
கூட்டாஹ் சந்திப்பில் கடை வைத்திருக்கும் நபர் ஒருவர்.
தீய பிராச்சாரத்தின் மூலம் பெரிதும் பாதிக்கப்பட்டவன்:
“நம்மை குறித்து, எந்தவொரு ஆதரமுமின்றி எதுவும்  சொல்லலாம், எல்லாவற்றையும் சொல்லலாம் என்பது போல் ஆகிவிட்டது” என்றார் சச்சின் சங்ரா, இவர் தான் நம்மை விஷால் ஜங்கோத்ராவிற்கு அறிமுகம் செய்து
வைத்தவர், அப்பகுதி குடியிருப்புவாசி. விஷால் ஜங்கோத்ராவின், உண்மையில் இவர் குற்றம் சுமத்தப்பட்ட நபர் அல்ல. ஆனால் இவருடைய புகைப்படம் எப்படியோ தவறாக பதிவாகி இப்போதும் சமூக ஊடகங்களில் மிக வைரலாக “கற்பழிப்பு செய்தவன்” என்ற அடை மொழியுடன் வலம் வருகிறது. இதனால் முற்றிலும் கலக்கமடைந்த ஜங்கோத்ரா ஸ்வராஜ்யா குழுவிடம் தெரிவித்தது “அவர்கள் என் இரத்தத்தை வேண்டுகிறார்கள். ஆசஸ் கான் என்கிற நடிகர் என் தலைக்கு ஐம்பது இலட்சத்தை நிர்ணயித்துள்ளார். நான் என்னுடைய முகநூல் கணக்கை கூட முடக்கி விட்டேன். காரணம் அங்கே இடப்படும் பின்னூட்டங்கள் என்னை உரைந்து போக செய்கின்றது. நான் ஜம்முவிற்கு செல்ல வேண்டியிருந்ததால் என் முகத்தை கை குட்டையால் மூடி கொண்டு தான் சென்றேன். நான் திருமணங்களில் சமைப்பவன், என்னை யாராவது கொலை செய்து விட்டால் நான் என்ன செய்வேன்? என்று கேட்டார் பரிதாபமாக.
(விஷால் ஜங்கோத்ரா)
நியாயத்திற்கான பாதை:
ஜம்மு காஷ்மீர் குற்றப்பிரிவால் பதியப்பட்ட குற்ற அறிக்கையில் சில ஓட்டைகள் இருப்பதை காண முடிகிறது. மற்றும் சில ஊடகங்கள் உருவாக்கிய மாய பிம்பங்கள் சொல்வதற்கு கூட வாய் கூசுகின்றன. இதை இந்த கோரமான செயலை சஞ்சு ராம் செய்தாரா இல்லையா என்பதை திறமையான முகவர்கள் முடிவு செய்வார்கள்.
ஆனால் இந்த கொடும் தீமையான செயலை செய்வதற்கு சஞ்சு தன்னுடைய சொந்த மகனையும், சகோதரி மகனையுமே பயன்படுத்தியிருப்பார் என்பதை யாராலும் ஏற்று கொள்ள முடியவில்லை. பல மர்மான கதைகள் இந்த சம்பவத்தை சுற்றி சுழன்று கொண்டிருக்கின்றன, அதில் உண்மையான கதை என்பதை அறிவதற்கான பாதை விரைவில் தெரியும்.
இந்த வழக்கின் முக்கிய திருப்பமாக கருதப்படுவது குற்றம் சாட்டப்பட்டவர் சிபிஐ விசாரணை கோருவதும், மயக்க மருந்து பரிசோதனையை(NARCO Test) நடத்த சொல்வதும் தான். இதை ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முப்டி செயல்படுத்த விடமாட்டார், காரணம் இது அவருக்கு கெளரவ போராட்டம். இப்படி செய்வது அவருடைய அரசியல் எதிர்காலத்திற்க்கு பேரிடராக அமையும். இது தான் இவ்வழக்கை சிபிஐ போன்ற சிறப்பு பிரிவிற்கு மாற்றப்படுவதை தடுக்கிறது. இம்மாவட்டத்தின் குற்றக்கிளையின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை மிக குறைவானது. எனவே சிறுமிக்கான நியாயத்திற்கான பாதை தற்சமயம் சம தளத்தில் இல்லை.












Monday, 19 February 2018

விநாயகர் வழிபாடு ( தமிழகம் ) - 2


பிள்ளையார் வழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும்

தமிழர் வாழும் இடமெல்லாம் இன்று தழைத்துப் பெருகியிருக்கும் பிள்ளையார் வழிபாடு, தமிழ்நாட்டில் எந்தக் காலத்தில் தோன்றியதென்பது குறித்துப் பல ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. எனினும், அவற்றுள் எந்த ஆய்வும் திடமான முடிவுகளை முன்வைக்காமை பெருங்குறையே.

தமிழர் வரலாறு போதுமான சான்றுகளைக் கொண்டு தொடங்குவது சங்க காலத்திலிருந்துதான். கி.மு மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி இரண்டாம் நூற்றாண்டு வரை செழித்திருந்த இச்சங்க காலத் தமிழர் வரலாற்றைத் தெளிவுற அறிய இலக்கியங்களும் கல்வெட்டுகளும் அகழ்வாய்வுச் சான்றுகளும் நன்கு உதவுகின்றன. இக்காலகட்டத் தமிழர் சமய வரலாறு பல்துறை அறிஞர்களால் தொகுக்கப்பெற்றுள்ளது. சேயோன் (முருகன்), மாயோன் (திருமால்), வேந்தன் (இந்திரன்), வருணன்(1), பழையோள்(2) (கொற்றவை), முக்கண்ணன்(3) (சிவபெருமான்), பலராமன்(4), உமை(5) எனத் தமிழர் வழிபட்ட தெய்வங்களைச் சங்க இலக்கியங்கள் பல பாக்களால் அறிமுகப்படுத்துகின்றன. சங்க இலக்கியங்களுள் காலத்தால் பிற்பட்டனவாகக் கருதப்படும் கலித்தொகை, பரிபாடல் ஆகிய இரண்டும் இறை சார்ந்த பல தொன்மங்களை விளக்குகின்றன. சங்க காலத்திற்குச் சற்று முற்பட்டதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள தொல்காப்பியமும் தமிழர் வழிபாட்டுச் சிந்தனைகளை முன்வைக்கிறது. இவ்விலக்கியங்களுள் ஒன்றுகூட, மறைபொருளாகவேனும் பிள்ளையார் வழிபாட்டைப் பற்றி யாண்டும் குறிப்பிடாமை நினைவு கொள்ளத்தக்கது.

'நல்லவுந் தீயவும் அல்ல குவியிணர்ப் புல்லிலை எருக்கமாயினும் உடையவை கடவுள் பேணேம் என்னா' என்னும் புறநானூற்றுப் பாடலடி (106) கொண்டு, அதன் பொருளை உணர்ந்தும் உணரார் போல சிலர் சங்க காலத்தில் பிள்ளையார் வழிபாடு இருந்ததாகக் கூறுவது பிழையாகும்(6). 'நல்லதென்றும், தீயதென்றும் வகைப்படுத்த இயலாத எருக்கம்பூ தரினும் தெய்வங்கள் அவற்றை மறுப்பதில்லை' எனும் பொருளமைந்த இப்பாடல், தெய்வங்களின் சார்பற்ற தன்மையைச் சுட்டுகிறதே தவிர, பிள்ளையார் வழிபாட்டை அல்ல. எருக்கம்பூ, சிவபெருமானால் விரும்பிச் சூடிக்கொள்ளப்பட்ட பூவாக அப்பர் பெருமானால் சுட்டப்படுவது நோக்க(7), பின்னாளிலேயே இது பிள்ளையாருக்கு உகந்த பூவாக மாற்றப்பட்டமை தெளிவாகும். எவ்வித அடிப்படைச் சுட்டலும் இல்லாத இப்பாடலடி கொண்டு, பிள்ளையார் வழிபாடு சங்க காலந்தொட்டே இருந்தது எனக்கூறுவார் கூற்று எவ்விதத்தானும் உண்மையாகாமை கண்கூடு.

தமிழ்நாடு முழுவதுமாய் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் இக்காலகட்டச் சான்றுகளைப் பலவாய்த் தந்திருந்தாலும், பிள்ளையார் வழிபாட்டைக் குறிக்கும் எத்தகு அடையாளங்களையும் இன்றுவரை தரவில்லை. தமிழ்நாட்டின் இயற்கைக் குகைத்தளங்களில் காணப்படும் இக்காலகட்டத் தமிழிக் கல்வெட்டுகளும் இது குறித்து மௌனமாகவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது(8).

சங்க காலத்தை அடுத்தமைந்த மூன்று நூற்றாண்டுகளில் (கி.பி 200 - கி.பி 500) தமிழ்நாடு தமிழர் கையிலிருந்து மாறிப் பல்லவர், களப்பிரர் வயமாயிற்று. இக்காலகட்ட வரலாற்றை அறிய பல்லவர்களின் பிராகிருத, வடமொழிச் செப்பேடுகளும் இலக்கியங்களும் உதவுகின்றன. பல்வேறு அறிவியல் பூர்வமான சான்றுகளின் அடிப்படையில் தமிழ்நாடு, இலங்கை, ஜப்பான் சார்ந்த அறிஞர் பெருமக்கள் சிலப்பதிகாரம், மணிமேகலை, திருக்குறள் முதலிய இலக்கியங்களை இக்காலகட்டம் சார்ந்தவை என அடையாளப்படுத்தியுள்ளனர். இவ்விலக்கியங்களுள், தமிழர் சமய வரலாறு குறித்து அரிய பல தரவுகளை உள்ளடக்கியிருக்கும் சிலப்பதிகாரம் புகாரிலும் மதுரையிலும் இருந்த இறைக் கோயில்களை வகைப்படுத்தியும் வரிசைப்படுத்தியும் காட்டுகிறது.

பிறவா யாக்கைப் பெரியோன் (சிவபெருமான்), அறுமுகச் செவ்வேள் (முருகன்), வாலியோன் (பலராமன்), நெடியோன் (திருமால்), இந்திரன், கொற்றவை, உமை, கதிரவன் எனப் பல்வேறு முதன்மைத் தெய்வங்களைச் சுட்டும் சிலப்பதிகாரம், தருக்கோட்டம், வெள்யானைக் கோட்டம், வேற்கோட்டம், வச்சிரக்கோட்டம் என இறை சார்ந்தவற்றிற்கு அமைந்த கோயில்களையும் காட்டுகிறது(9). சிறு தெய்வ வணக்கம் பற்றியும் விரித்துரைக்கும் இவ்விலக்கியத்தில் பேரூர் சார்ந்தோ சிற்றூர் சார்ந்தோ எவ்விடத்தும் பிள்ளையார் வழிபாடு பேசப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இக்காலகட்டத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் பூலாங்குறிச்சிக் கல்வெட்டு, கோயில்களைப் பற்றியும் இறைவழிபாடு பற்றியும் கூறினாலும் பிள்ளையார் பற்றிய குறிப்புகளைக் கொண்டிருக்காமை கருதத்தக்கது(10). இக்காலப் பகுதிக்கு உரியனவாக அடையாளம் காணப்பட்டிருக்கும் வட்டெழுத்துக் கல்வெட்டுகளிலும் பிள்ளையார் சுட்டல் இல்லை(11).

பிள்ளையாரை முதன்முதலாக அறிமுகப்படுத்தும் இலக்கியங்கள் அப்பர், சம்பந்தர் திருமுறைகளே. இந்த ஆறு திருமுறைகளிலும் அப்பரும் சம்பந்தரும் பிள்ளையாரைப் பற்றி மிகக் குறைவான இடங்களிலேயே குறிப்புத் தருகின்றனர். இப்பெருமக்களின் காலம் கி.பி ஏழாம் நூற்றாண்டின் தொடக்கம் என அறிஞர் கொள்வர். இக்குறிப்புகளால், பிள்ளையார் சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்டவர் என்பதையும் கயாசுரனைப் போரில் வென்றவர் என்பதையும் அறியமுடிவதுடன், அவரது தோற்றம் பற்றிய வண்ணனைகளையும் ஓரளவிற்குப் பெறமுடிகிறது.

உமை பெண் யானையின் வடிவம் கொள்ள, சிவபெருமான் ஆண் யானையின் வடிவம் கொண்டு இணைந்ததன் பயனாய்ப் பிறந்தவர் பிள்ளையார் என்பதை இரண்டு பதிகங்களால் விளக்குகிறார் சம்பந்தர். தம்மை வழிபடும் அடியவர்தம் இடர்களைத் தீர்ப்பதற்காக இறைவன் அருளிய கொடையே கணபதி என்று பிள்ளையாரின் பிறப்பிற்குக் காரணம் காட்டும் சம்பந்தர் (சம். 1: 123:5, 126:6), 'தந்த மதத்தவன் தாதை' (1:115:2), 'மறுப்புறுவன் தாதை' (1:117:8), 'கரியின் மாமுகமுடைய கணபதி தாதை' (2:232:3) என்று சிவபெருமானைச் சிறப்புச் செய்யுமாறு பிள்ளையாரின் தோற்றம் காட்டுகிறார்.

நாவுக்கரசர், சம்பந்தரின் கூற்றைக் 'கைவேழ முகத்தவனைப் படைத்தார்' (6:53:4), 'வினாயகர் தோன்றக் கண்டேன்' (6:77:8), 'ஆனைமுகற்கு அப்பன்' (6:74:7), 'கணபதி என்னும் களிறு' (4:2:5) எனும் பல்வேறு தொடர்களால் உறுதிப்படுத்துகிறார். கயாசுரனைக் கொல்லச் சிவபெருமான் பிள்ளையாரைப் பயன்படுத்திக் கொண்ட தகவலைத் தரும் நாவுக்கரசர், அதற்காகவே பிள்ளையார் பிறப்பிக்கப்பட்டார் எனக் கருதுமாறு பாடல் அமைத்துள்ளார் (6:53:4).

முருகப்பெருமானைப் பற்றி நாற்பத்தேழு இடங்களில் விதந்தோதும் இவ்விரு சமயக் குரவரும், பிள்ளையாரைப் பற்றி மிகக் குறைவான அளவிலேயே குறிப்புகள் தந்திருப்பதை நோக்க, இவர்தம் காலத்திற்குச் சற்று முன்னதாகவே பிள்ளையார் வழிபாடு தமிழ்நாட்டில் கால் கொண்டதாகக் கருதலாம்.

தமிழ்நாட்டில் இன்றைக்கும் காணப்படும் இறைக் கோயில்களுள் காலத்தால் பழமையானவை குடைவரைகளே. குன்றுகளைக் குடைந்தும், பாறைகளைச் செதுக்கியும் இத்தகு குடைவரைகள் அமைக்கப்பட்டன. வடதமிழ்நாட்டில் இத்திருப்பணியைத் தொடங்கியவர் பல்லவப் பேரரசரான முதலாம் மகேந்திரவர்மர். இவர் குடைவரைகள் எவற்றிலும் பிள்ளையார் சிற்பம் இடம்பெறவில்லை(12). திருக்கழுக்குன்றத்தில் உள்ள ஒருகல் மண்டபம் முதலாம் நரசிம்மவர்மரின் திருப்பணியாகக் கருதப்படுகிறது. இதிலும் பிள்ளையாரின் வடிவமில்லை. இராஜசிம்மரின் குடைவரைகளிலும் பிள்ளையாரின் சிற்பம் இறைவடிவமாகக் காட்டப்படவில்லை என்றாலும், மாமல்லபுரம் இராமாநுஜர் குடைவரையின் பூதவரியில் பிள்ளையார் இடம்பெற்றுள்ளார்.

இராஜசிம்மர் பணியான மாமல்லபுரம் தருமராஜர் ரதத்தின் பூதவரியிலும் பிள்ளையார் எனக் கொள்ளத்தக்க வடிவங்கள் இடம்பெற்றுள்ளன(13). இராஜசிம்மரின் கற்றளிகளில் கூடுகளிலும் கோட்டங்களிலும் பிள்ளையார் இடம்பெறத் தொடங்குகிறார். சிராப்பள்ளியிலுள்ள கீழ்க்குடைவரை(14), சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த திருப்பட்டூர்க் கைலாசநாதர் கோயில்(15), செங்கற்பட்டு மாவட்டம் வல்லத்திலுள்ள கந்தசேனரின் குடைவரை(16), ஆகியவற்றில் பிள்ளையார் கோட்டத் தெய்வமாகக்(17) காட்டப்பட்டுள்லமை குறிப்பிடத்தக்கது. இக்காலகட்டத்தைக் கி.பி எட்டாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியாகக் கொள்ளலாம். இதனால் வடதமிழ்நாட்டு இறைக்கோயில்களில், பிள்ளையாரின் சிற்பங்கள் சம்பந்தர், அப்பர் காலத்திற்கு ஏறத்தாழ ஒரு நூற்றாண்டிற்குப் பிறகே இடம்பெறத் தொடங்கியமை தெளியப்படும்.

தென் தமிழ்நாட்டில் பாண்டியர், முத்தரையர் கைவண்ணமாகப் பிறந்த குடைவரைகள் பலவற்றில் பிள்ளையாரின் சிற்பம் காணப்படுகிறது. அவற்றுள் குறிப்பிடத்தக்கது பிள்ளையார்பட்டி(18). அங்குள்ள பிள்ளையார் இன்றைக்கு முதன்மைத் தெய்வமாக வழிபடப்பட்டாலும், உருவான காலத்தில் சிவபெருமானுக்கான குடைவரையின் முன், பக்கவாட்டில் விரியும் சுவரில் கோட்டத் தெய்வமாகச் செதுக்கப்பட்டவரே ஆவார். இக்குடைவரையில் இடம்பெற்றுள்ள வட்டெழுத்துக் கல்வெட்டு, 'எக்காட்டூருக் கோன் பெருந்தசன்' எனும் பெயரைத் தருகிறது. இக்கல்வெட்டின் எழுத்தமைதி கொண்டு இதை ஆறாம் நூற்றாண்டென்பர் அறிஞர்கள்(19).

இக்கருத்து ஏற்புடையதாயின் பிள்ளையர்பட்டிக் குடைவரையின் காலமும் ஆறாம் நூற்றாண்டாகிவிடும். எனில், தமிழ்நாட்டின் காலத்தால் முற்பட்ட பிள்ளையார் சிற்பமாகப் பிள்ளையார்பட்டிக் குடைவரைப் பிள்ளையாரையே கொள்ளவேண்டிவரும். குடைவரையின் அமைப்பு, சிற்பங்களின் செதுக்கு நேர்த்தி கொண்டு இக்குடைவரையின் காலத்தை ஏழாம் நூற்றாண்டாகக் கொள்வாரும் உண்டு. இரண்டில் எதை ஏற்பினும் இப்பிள்ளையாரே தமிழ்நாட்டின் காலத்தால் முற்பட்ட பிள்ளையார் என்பதில் ஐயமில்லை.

திருமலைப்புரம், செவல்பட்டி, தேவர்மலை, அரிட்டாபட்டி, மலையக்கோயில், திருக்கோளக்குடி, திருப்பரங்குன்றம், மலையடிப்பட்டி, குன்றக்குடி, கோகர்ணம் முதலிய பல பாண்டியர், முத்தரையர் குடைவரைகளில்(20) பிள்ளையார் சிற்பம் இடம்பெற்றுள்ளமையை நோக்க, தமிழ்நாட்டில் பிள்ளையார் வழிபாடு காலூன்றிய முதல் இடமாகப் பாண்டிய மண்ணையே கொள்ளவேண்டியுள்ளது. கி.பி ஆறு, ஏழாம் நூற்றாண்டுகளில் சிராப்பள்ளிக்குத் தெற்கே காலூன்றிப் பரவிய இப்பிள்ளையார் வழிபாடு எட்டாம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில்தான் வடதமிழ்நாட்டிற்குள் குடிபுகுந்தது. எட்டாம் நூற்றாண்டிற்குப் பிறகும் தமிழ்நாட்டுச் சமய வரலாற்றில் முருகப்பெருமானுக்குக் கிடைத்த இடம் பிள்ளையாருக்குக் கிடைக்கவில்லை என்பதே உண்மை. பல்லவர், பாண்டியர், முத்தரையர் குடைவரைகளில் கோட்டத் தெய்வமாக இடம்பெற்ற பிள்ளையார், தொடக்கக் காலப் பல்லவக் கற்றளிகளில் ஆங்காங்கே இடம்பெற்றாலும், அபராஜிதர் காலக் கற்றளிகளில்தான் உள்மண்டபத் தென் கோட்டத் தெய்வமாக நிலைபெற்றார்(21). இந்நிலைபேறு சோழர் காலத்தில் உறுதியாக்கப்பட்டது.

சோழர் காலக் கற்றளிகளின் திருச்சுற்றில் சுற்றாலைக் கோயில்கள் உருவானபோது எண்பரிவாரத்துள் ஒன்றாகப் பிள்ளையாருக்கும் இடம் கிடைத்தது. திருச்சுற்றின் தென்மேற்கு மூலை பிள்ளையாருக்கு உகந்த இடமாக ஒதுக்கப்பட்டு அவருக்கெனத் தனித் திருமுன் அமைக்கப்பட்டது. இத்தகு பிள்ளையார் திருமுன்களைச் சோழர் கற்றளிகளிலும் பின்னால் வந்த பிற மரபுப் பேரரசுக் காலக் கற்றளிகளிலும் இன்றும் காணலாம்.

கோட்டத் தெய்வமாகவோ, சுற்றாலைத் தெய்வமாகவோ மட்டுமே அமைந்த பிள்ளையாருக்குத் தனிக்கோயில் அமைக்கும் பழக்கம் மிகப் பிற்பட்ட காலத்திலேயே ஏற்பட்டது. தமிழ்நாட்டுக் கோயில்களில் கிடைக்கும் பல்லாயிரக்கணக்கான கல்வெட்டுகளும் அதையே உறுதி செய்கின்றன.

குறிப்புகள்

1. தொல்காப்பியம், பொருளதிகாரம், இளம்பூரணம், நூற்பா எண். 5.

2. திருமுருகாற்றுப்படை, 258-259.

3. புறநானூறு, 6:18

4. கலித்தொகை, அனந்தராமையர் பதிப்பு, தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு, தஞ்சாவூர், ப.144.

5. கலித்தொகை, 38:1-5.

6. நடன காசிநாதன், தமிழகமும் கணபதி வழிபாடும், தாய் நாட்டிலும் மேலைநாடுகளிலும் தமிழியல் ஆய்வு, பக்.162-170.

7. 4:104:4; 5:95:5

8. Iravatham Mahadevan, Early Tamil Epigraphy, pp. 314-447.

9. சிலப்பதிகாரம், 5:169-173; 9:9-13

10. எ.சுப்பராயலு, எம்.அர். ராகவ வாரியர், பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகள், ஆவணம் 1, பக். 57-69.

11. Iravatham Mahadevan, Early Tamil Epigraphy, pp. 450-537

12. மு.நளினி, இரா.கலைக்கோவன், மகேந்திரர் குடைவரைகள் ஓர் ஒப்பாய்வு, வரலாறு 11, பக். 57-82.

13. மு.நளினி, இரா.கலைக்கோவன், அத்யந்தகாமம், பக். 11-12.

14. மு.நளினி, இரா.கலைக்கோவன், சிராப்பள்ளிக் கீழ்க்குடைவரை, வரலாறு 9,10, பக்.131-179.

15. இரா.கலைக்கோவன், கண்டறியாதன காட்டும் கைலாசநாதர், அமுதசுரபி தீபாவளி மலர் 1997, பக். 303-306.

16. இக்குடைவரை முதலாம் மகேந்திரர் காலத்தில் அவர் அடியாரான வயந்தப் பிரியரைசரின் மகன் கந்தசேனரால் குடைவிக்கப்பட்டது. குடைவரை குடையப்பட்டுள்ள பாறையின் வெளிப்புறத்தே வலப்பக்கம் கோட்டம் அகழ்ந்து பிள்ளையார் வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. தோற்றம், செதுக்குநேர்த்தி கொண்டு இப்பிள்ளையார் வடிவம் குடைவரைக் காலத்ததா அல்லது பிற்காலத்தில் உருவாக்கப்பட்டதா என்பதை உறுதியாகக் கூறக்கூடவில்லை. இரண்டாம் நரசிம்மரான இராஜசிம்மப் பல்லவரின் தொடக்கக் காலக் கட்டுமானப் பணிகளில்தான் பிள்ளையார் வடிவத்தைப் பூதவரிகளில் காணமுடிகிறது. அவர் காலக் கற்றளிகளில் பிள்ளையார் கோட்டத் தெய்வமாக இடமாற்றம் பெறுகிறார். பல்லவர் கைவண்ணமான சிராப்பள்ளிக் கீழ்க்குடைவரை முருகன், கொற்றவை, சூரியன், நான்முகன் ஆகிய தெய்வங்களுக்கு இணையான தெய்வமாகப் பிள்ளையாரைச் சமநிலையில் நிறுத்திப் பெருமைப்படுத்தியுள்ளது. காலநிரலான இப்பரிணாம வளர்ச்சியைக் காணும்போது, வல்லம் குடைவரைப் பிள்ளையாரைக் குடைவரைக் காலத்திற்குச் சற்றுப் பிற்பட்டவராகவே கொள்ளவேண்டியுள்ளது. வல்லத்துக் குன்றில் இலக்கசோமாசியார் மகள் எடுத்துள்ள இரண்டாம் குடைவரையின் முகப்பிற்கு முன் விரியும் பக்கச் சுவரில் ஒரு பிள்ளையார் வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. அதையும் கி.பி எட்டாம் நூற்றாண்டுப் படைப்பாகவே கொள்ளலாம்.

17. 'வல்லத்தில் மகேந்திரவர்மன் காலத்தியதாகக் கருதப்படும் குடைவரைக் கோயிலில், ஒரு சன்னதியின் முன்பாக உள்ள இரு தூண்களில் ஒன்றில் கணபதியின் உருவமும் மற்றொன்றில் சேட்டையின் சிற்பமும் செதுக்கப்பட்டிருக்கின்றன' எனும் நடன காசிநாதனின் கூற்று, அவர் வல்லம் குடைவரையைப் பார்க்காமலேயே கட்டுரைத்துள்ளமையைத் தெளிவுபடுத்துகிறது. தமிழகமும் கணபதி வழிபாடும், தாய்நாட்டிலும் மேலைநாடுகளிலும் தமிழியல் ஆய்வு, ப.167.

18. இரா.கலைக்கோவன், பிள்ளையார்பட்டிக் குடைவரை, அமுதசுரபி தீபாவளி மலர், 2000, பக். 82-86.

19. Iravatham Mahadevan, Early Tamil Epigraphy, pp. 475-675; பிள்ளையார்பட்டிப் பிள்ளையாரையும் இக்கல்வெட்டையும் பற்றிக் குறிப்பிடும்போது நடன காசிநாதன், 'பிள்ளையார்பட்டியில் காணப்பெறும் குடைவரைக்கோயிலில் ஒரு பழமையான கல்வெட்டும், கணபதியின் புடைப்புச் சிற்பமும் அருகருகே காணப்பெறுகின்றன' என்று தவறான தகவல் தந்துள்ளார். தமிழகமும் கணபதி வழிபாடும், தாய்நாட்டிலும் மேலைநாடுகளிலும் தமிழியல் ஆய்வு, ப.166. பிள்ளையார் சிற்பம் சிவபெருமான் குடைவரையின் வடபுறம் உள்ள பாறைச்சுவரில் ஹரிஹரர் சிற்பத்தை அடுத்துச் செதுக்கப்பட்டுள்ளது. சிவபெருமான் குடைவரைக்குத் தென்புறம் விரியும் கிழக்குச் சுவரில் உள்ள அரைத்தூணில் பெருந்தசன் கல்வெட்டுக் காணப்படுகிறது.

20. அர.அகிலா, இரா.கலைக்கோவன், திருமலைப்புரம் குடைவரை, வரலாறு 6, பக். 118-134;
சீ.கீதா, இரா.கலைக்கோவன், செவல்பட்டிக் குடைவரை, வரலாறு 4, பக்.25-38;
அர.அகிலா, தேவர்மலைக் குடைவரை, வரலாறு 3, பக். 57-66;
மு.நளினி, இரா.கலைக்கோவன், அரிட்டாபட்டிக் குடைவரை, பதிப்பிக்கப்படாத கட்டுரை;
மு.நளினி, இரா.கலைக்கோவன், மலையக்கோயில் குடைவரைகளும் கல்வெட்டுகளும், வரலாறு 11, பக். 159-174;
மு.நளினி, இரா.கலைக்கோவன், பரங்குன்றம் குடைவரை, பதிப்பிக்கப்படாத கட்டுரை;
ம.ஜான்சி, மு.நளினி, இரா.கலைக்கோவன், மலையடிப்பட்டிக் குடைவரைகளும் கல்வெட்டுகளும், வரலாறு 4, பக்.64-115;
அர.அகிலா, மு.நளினி, குன்றக்குடிக் குடைவரைகளும் கல்வெட்டுகளும், வரலாறு 2, பக். 56-106;
மு.நளினி, இரா.கலைக்கோவன், திருக்கோளக்குடிக் குடைவரையும் கற்றளிகளும், வரலாறு 6, பக். 134-168;
மு.நளினி, இரா.கலைக்கோவன், கோகர்ணம் குடைவரையும் கல்வெட்டுகளும், பதிப்பிக்கப்படாத கட்டுரை.

21. மு.நளினி, இரா.கலைக்கோவன், அபராஜிதர் காலக் கற்றளிகள், பதிப்பிக்கப்படாத கட்டுரை.

விநாயகர் வழிபாடு ( தமிழகம் ) - 1



தமிழகத்தில் பிள்ளையார், விநாயகர், கணபதி வழிபாடு: இலக்கிய-அகழ்வாய்வு-சரித்திர ஆதாரங்கள்.


தமிழகத்தில் பிள்ளையார்விநாயகர்கணபதி வழிபாடுஇலக்கியஅகழ்வாய்வுசரித்திரஆதாரங்கள்.
IVC Elephant head-4 vedaprakash
பெரியாரிஸதிராவிட கழகவாதம்[1]: “641 CE க்கு முன்தமிழகத்தில் பிள்ளையார் சதுர்த்திஎன்பதோபிள்ளையார் வழிபாடோகிடையாதுஇதற்கான ஆதாரம்கேட்கப்புகின்தொல்காப்பியத்தில்கூட மாயோன்சேயோன்வருணன்வேந்தன்கொற்றவை குறித்துபேசப்படுகிறதே தவிர பிள்ளையார்இல்லைசங்க நூல்களிளேகூடகதிரவன்காளிகூளிகாற்றுகாடுகாத்தாள்நம்பின்னைபலராமன் போன்றோர்பேசப்படுகின்றதே தவிர தும்பிக்கைகடவுள் இல்லை”, என்று திகவினர் வாதிடும் போது, மற்ற சங்க இலக்கிய ஆதாரங்களை மறைப்பதை கவனிக்கலாம். “641 CEல் நரசிம்மவர்மன் வாதாபியின்மீது போர் தொடுத்து இரண்டாம்புலிகேசியை வென்றபோது அவன்படைத்தலைவனானபரஞ்சோதிதான் அங்கிருந்தயானைத்தலை மனித உடலுடன்கூடிய  பொம்மையை எடுத்துவந்துகாட்சிப் பொருளாக வைத்தான்அதன் பிறகு புராணக் கதை எழுதிபார்வதிக்கு மகனாக்கினர்முருகனுக்கு அண்ணனாக்கினர்”, என்று வழக்கம் போல தூஷண படலத்தைக் காணலாம். இக்காலத்திலும், இப்படி 1960-70 வாதங்களை வைத்து விதண்டாவாதம் செய்வதால், உண்மையினை அறிய வேண்டாம் என்றுள்ள போக்குதான் வெளிப்படுகின்றது.
IVC Elephant head-1
பரஞ்சோதிக்குப் பிறகு தான்பிள்ளையார் வழிபாடு ஏற்பட்டது: “சிறுத்தொண்டர் என்னும்பரஞ்சோதியார்  நரசிம்மவர்மப்பல்லவனின் படைத் தலைவராகப்படையுடன் சென்று சாளுக்கியமன்னனின் வாதாபி என்னும்தொன்னகரைத் துகளாக்கிஅங்கிருந்த கணபதியைக்கொண்டு வந்து தாம்வழிபட்ட திருச்செங்காட்டங்குடியில் நிறுவினார்இவருக்கு வாதாபிகணபதி என்று பெயர்,[2] என்று விகிபீடியா போன்றவையும் பாட்டு பாடுகின்றன. 2007-ஆம் ஆண்டில், கருணாநிதி, “பிள்ளையார்கர்நாடகத்தைச் சேர்ந்த வாதாபியில்பிறந்தவர்அவர் பல்லவர்காலத்தில்தான் தமிழகத்திற்குக்கொண்டு வரப்பட்டார்எனவே அவர்தமிழ் கடவுள் அல்ல,” என்று பேசினார். படித்தாலும், பண்பில்லாததால், அவர் அவ்வாறு பொய் சொல்லியே காலத்தை கழித்தார். “17 ஆம் நூற்றாண்டின்போது தமிழ்நாட்டை சேர்ந்த ஒருமன்னர் வட மாநிலத்தில் போர்புரிந்து வெற்றிபெற்றார் அதன்நினைவாக அங்கிருந்த விநாயகர்சிலையை கொண்டு வந்தார்அதன்பிறகு தமிழ்நாடு முழுவதும்விநாயகர் வழிபாடுகள்தொடங்கினதமிழகத்தில்இவ்விழா பெரும்பாலும் குடும்பவிழாவாகவே கொண்டாடப்பட்டதுவெகுகாலத்தின் பின்னரே பொதுவிழாவாக அறிமுகப்படுத்தப்பட்டுகொண்டாடப்பட்டது,” என்று விகிபீடியா இன்னொரு கதையினையும் சொல்கிறாது[3].
IVC Elephant head-2
4-6 நூற்றாண்டுகளில் CE பிள்ளையார் வழிபாடு இருந்தது: தமிழ்நாட்டில் தொல்லியல் மற்றும் வரலாற்று அறிஞர்கள் மேற்கொண்ட ஆய்வில், சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி குடை வரைகோயிலில் உள்ள கற்பக விநாயகர் சிலை, 6-ம் நூற்றாண்டுக்கு CE உட்பட்டதாகும். இந்த கோயிலையும், விநாயகரையும் உருவாக்கிய கல்தச்சனின் பெயர் எக்காட்டூரூக்கோன் பெருந்த(ச்)சன் என்று உள்ளது. இது 6-ம் நூற்றாண்டில் CE காணப்பட்ட எழுத்து வடிவில் இருப் பதால் வாதாபி காலத்துக்கு முன்பே பிள்ளையார் வழிபாடு தமிழகத்தில் இருந்து வந்ததை அறிய முடிகிறது[4]. மேலும், இதே காலகட்டத்தைச் சேர்ந்த எழுத்து பொறிக்கப்படாத இரண்டு சிற்பங்கள் உத்திரமேரூரிலும், வேளச்சேரியிலும் வழிபாட்டில் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரி விக்கின்றனர். 2015ல் போது திண்டிவனம் அருகே ஆலகிராமத்தில் உள்ள எமதண் டீஸ்வரர் கோயிலில் வட்டெழுத்து பொறிக்கப்பட்ட கல்லில் பிள்ளையார், லகுவேஸ்வரர் மற்றும் முருகன் சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இக்கோயிலின் தெற்கு வெளிப்புற அதிட்டானத்தில் பிள்ளையார் சிற்பம் வைக்கப்பட்டுள்ளது. இச் சிற்பம் 75 செ.மீ உயரம், 40 செ.மீ அகலம் கொண்ட நீண்ட கல்லில் வெட்டப்பட்டுள்ளது. பிள்ளையார் பீடத்தில் 3 வரி களில் கல்லெழுத்து பொறிக்கப் பட்டுள்ளது. இவ்வெழுத்தின் வடி வம் பூளாங்குறிச்சி எழுத்து வடி வத்துக்கு பின்னும், பிள்ளையார் பட்டி குடைவரைக்கோயில் கல் லெழுத்து வடிவத்துக்கு முந்தை யதும் ஆகும். அதாவது 4-ம் நூற்றாண்டுக்கும், 6-ம் நூற்றாண்டுக்கும் CE இடைப்பட்ட தாகும்.
IVC Elephant head-4 all sides
தமிழகத்தில் 4ம்நூற்றாண்டிலிருந்துபிள்ளையார் வழிபாடு இருந்தது: சங்க இலக்கியங்களில் வரும் சதுக்கப் பூதம், விநாயகர் என்றும் விளக்கம் கொடுப்பதுண்டு. யானையை சங்க காலம் நன்றாக அறிந்திருந்ததால், அதன் தன்மை, மேன்மை முதலியவற்றை தெய்வத் தன்மையுடன் இணைத்த இலக்கிய ஆதாரங்கள் இல்லாமல் இருந்தாலும், அவற்றை அறிந்திருக்கவில்லை என்றூ சொல்லமுடியாது. முல்லைப்பாட்டில் வரும் யானைகளை வளர்ப்போர், புரியாத மொழியில் பேசியதால், அவரை ஆரியர் என்றால், தமிழருக்கு, யானையைப் பற்றிய உரிமை போய் விடுகிறதா அல்லது தைப் பற்றிய ஞானமே அறியாமையாகி விடுகிறதா என்பது பிள்ளையாரை முதன்முதலாக அறிமுகப்படுத்தும் இலக்கியங்கள் அப்பர், சம்பந்தர் திருமுறைகளே. இந்த ஆறு திருமுறைகளிலும் அப்பரும் சம்பந்தரும் பிள்ளையாரைப் பற்றி மிகக் குறைவான இடங்களிலேயே குறிப்புத் தருகின்றனர். இப்பெருமக்களின் காலம் ஏழாம் நூற்றாண்டின் தொடக்கம் என அறிஞர் கொள்வர்[5]. சிந்துசமவெளி நாகரிக அத்தாட்சிகளில் தெரிந்து விடுகிறது. திருமுருகாற்றுப்படையில்ஒருகை தம்பி என்று வரும்சொற்றொடர்பிள்ளையாரைக்குறிக்கும் என்றுவிளக்கப்படுகிறது.  ஔவையார்காலம்உறுதியாகக் கணக்கிடமுடியவில்லைமேலும்அப்பெயரில்பலகாலங்களில்ஒன்றிற்கும் மேலான புலவர்கள்இருந்திருக்கக் கூடும் என்றும்ஆராய்ச்சியில் தெரியவருகிறதுஆகவேஇலக்கிய சான்றுகள்மற்றும் இதுவரை கிடைத்துள்ளஅகழ்வாய்வு ஆதாரங்களைவைத்துப் பார்த்தால்நிச்சயமாக 4ம் நூற்றாண்டிலிருந்துபிள்ளையார் வழிபாடு இருந்தது என்பது உறுதியாகிறது.
Three-headed Tiger, bovine, elephant head-Nausharo
சிந்து சமவெளியில்பிள்ளையார்: பிள்ளையார் சிந்துசமவெளியில், அதிலும் நௌஸோர் (இப்பொழுது பாகிஸ்தான்) என்ற இடத்தில் 9000 BCE வர செல்லும் அகழ்வாய்வு படிவுகளில் காணப்பட்டுள்ளது முக்கியமாக உள்ளது. சுட்ட மண்ணால் செய்யப்பட்ட மூன்று தலைகள் கொண்ட (உயரம் – 6.76, நீளம் – 6.97, அகலம் – 4,42; அளவுகள் செ.மீரில்) இந்த ஒரு உருவம் 1992ல் கிடைத்ததாகும். பாகிஸ்தான் மியூஸியத்தில் EBK 7712 என்ற எண்ணுடன் உள்ளது. இது ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை பெருமளவில் இழுத்துள்ளது. காத்தரைன் ஜேரிஜ் (Catherine Jarrige) என்பவர் தன்னுடைய கட்டுரையில் படங்களுடன் விவரித்துள்ளார். ஜொனாதன் மார்க் கெனோயர் (Jonatham Mark Keynoyer) புத்தகத்தில் 117வது பக்கத்தில், இதன் இரு படங்களைக் காணலாம். யானை, சிங்கம் / புலி, காளை என மூன்று தலைகள் உள்ளன. அவற்றில் யானை மற்றும் சிங்க / புலித் தலைகள் தெளிவாகவே உள்ளன. குறிப்பாக யானையின் காது, தும்பிக்கை விநாயகரைக் குறிப்பதாக உள்ளது. இத்தகைய மூன்று தலைகள் கொண்ட சிற்பங்கள், இந்தியக்கலைப் பொருட்களில் அதிகமாகவே காணப்படுகின்றன. யானை சிந்து சமவெளி முத்திரைகளில் பலவற்றில் காணப்படுகின்றன. மேலேயுள்ளது விளையாடும் பொம்மைகளில் காணப்படுகிறது. ஆகவே, கணேசன் / விநாயகன் / பிள்ளையாரை யார் அங்கு உருவாக்கினர் என்று கவனிக்க வேண்டும்.
Three-headed Tiger, bovine, elephant head-Nausharo-rebus
சிந்து சமவெளி நாகரிகம்திராவிடர்களுடையது என்றால்திராவிடர்கள் உருவாக்கினரா?: லிங்கம் என்பதற்கான தனித்தனியான பகுதிகளும் கிடைத்துள்ளன. நந்தியின் பொம்மைகள் நிறையவே கிடைத்துள்ளன. இன்றைக்கு, திராவிட சித்தாந்திகள் இப்படியுள்ள ஆதாரங்களையெல்லாம் விட்டுவிட்டு, ஏதேதோ பேசி-எழுதி வருகின்றனர். அரைத்த மாவை அரைத்துக் கொண்டு வருகின்றனர். 9000-6000 BCE முன்பாகவே, ஏற்பட்டுள்ள கலைவடிவம் இந்தியாவில் பரவ 1300-1500 வருடங்களில் தான் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று நினைப்பது வேடிக்கையாக உள்ளது. அந்த மண் சிற்பத்தில் காணப்படும் வளைவுகள், நெளிவுகள் முதலியவை சிற்பியின் கலைத்திறனை எடுத்துக் காட்டுகிறது. அத்தகைய கலைத்திறன் 7000 வருடங்களாக சும்மா இருந்து, திடீரென்று 2300 வருடங்களுக்கு முன்புதான் திடீரென்று மௌரிய காலத்தில் மறுபடியும் தோன்றியது என்று சரித்திர ஆசிரியர்கள் கூறுவதையும் மற்றவர்கள் கூர்மையாக கவனிக்க வேண்டும். கலை, கலைத்தோற்றம், உருவமைப்பு, சிற்பக்கலை முதலியன, மனிதர்களிடம் தொடர்ந்து நடப்பவையாகும். காலந்தோறும், சில மாறுதல்கள் இருந்தாலும், அடிப்படயில் உள்ள பழமையின் ஆதாரம் மாறாமல் இருக்கும். உலகத்த்தில் பற்பல இடங்களில் உள்ள விநாயகர்-கணபதி-பிள்ளையார் உருவங்கள் அத்தகைய ஒற்றுமையைக் காட்டுகின்றன. இடம், பொருள், காலம் முதலியவை மாறினாலும் யானை உருவம், தும்பிக்கை, காதுகள் முதலியன மாறுவதில்லை ஆக, சிந்து சமவெளி நாகரிகம், திராவிடர்களுடையது என்றால், காணபத்திய இந்துமதத்தை திராவிடர்கள் மறைக்கவோ, மறுக்கவோ, மறக்கவோ முடியாது.
Periyar statue - DK duplicity
தமிழர் திராவிடர் போர்வையில்இரட்டைவேடம் போட்டால்சரித்திரத்தை மறந்து விடவேண்டியது தான்; தனித்தமிழ் இயக்கம், ஆரிய-திராவிட போர்வையில் 19 நூற்றாண்டில் உண்டாக்கப்பட்ட இனவாத சித்தாந்தத்தின் படி, திராவிடர்கள், சிந்து சமவெளி நாகரிகம், திராவிடர்களுடையது என்றால், பிள்ளையாரை ஏற்றுக்கொள்ள வேண்டும். சிவன், ருத்திரன் போன்றோர் ஆரியர், ஆகையால், அவரது பிள்ளைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றால் விட்டுவிட வேண்டும். அதாவது, சிந்து சமவெளி நாகரிகம், திராவிடர்களுடையது என்ற வாதம் முரண்பட்டதாகி விடும். சிந்து சமவெளி நாகரிகத்தில் பிள்ளையார் இருந்தது, ஆனால், சங்கப் புலவர்கள் மறந்து விட்டனர், தொல்காப்பியரும் மறந்து விட்டார் என்றெல்லாம் வாதிட முடியாது. இத்தகைய குழப்பவாதங்களை வைத்துக் கொண்டு, இந்துவிரோதத்துடன் செயல்படுவதால், சரித்திரமே அவர்களது புரட்டுத்தனத்தை வெளிப்படுத்துகிறது. போலித்தனத்தை தோலுரித்து, முகமூடியைக் கிழித்தெறிகிறது. பிள்ளையாரை உடைத்தாலும், வழக்கிலிருந்து ஓடி ஒளிந்தாலும்[6], சரித்திரத்தை மறைக்கமுடியாது.
வேதபிரகாஷ்
24-08-2017
evr-statue-at-vaikam-31-01-1994
[4] Iravatham Mahadevan, Early Tamil Epigraphy, pp. 475-675.
[5] இரா. கலைக்கோவன், பிள்ளையார் வழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும் , வரலாறு.காம்; http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=575

ஸ்ரீமத் பாகவதம் (தமிழ்)

  Srimad-Bhagavatam  1 Srimad-Bhagavatam   2 Srimad-Bhagavatam   3 Srimad-Bhagavatam    4 Srimad-Bhagavatam   5 Srimad-Bhagavatam   6 Srimad...